திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 322 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
322பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 5
மானமரு மெல் நோக்கி வைதேவீ விண்ணப்பம் கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து தேனமரும் பொழிற் சாரல் சித்திர கூடத்து இருப்ப பால் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓரடையாளம்-3-10-5
பதவுரை Show / Hide
மான் அமரும்,Maan Amarum - மானை யொத்த
மென் நோக்கி,Men Nookki - மென்மையான கண்களை யுடையவளான
பால் மொழியாய்,Paal Mozhiyaai - பால் போல் இனியபேச்சை யுடையவளே!
விண்ணப்பம்;,Vinnappam - ஒரு விஜ்ஞாபகம்;
கான் அமரும்,Kaan Amarum - காட்டில் பொருந்திய
கல் அதர் போய்,Kal Adhar Poi - கல் நிறைந்த வழியிலேயே
காடு உறைந்த காலத்து,Kaadu Uraindha Kaalaththu - காட்டில் வஸித்த போது
தேன் அமரும் பொழில்,Then Amarum Pozhil - வண்டுகள் பொருந்திய சோலைகளை யுடைய
சாரல்,Saaral - தாழ்வரையோடு கூடிய
சித்திர கூடத்து,Siththira Koodaththu - சித்திர கூட பர்வதத்தில்
இருப்ப,Irup - நீங்கள் இருக்கையில்
பரதன் நம்பி,Barathan Nambi - பரதாழ்வான்
பணிந்ததும்,Panindhadum - வந்து வணங்கியதும்
ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும்.