திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3201 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3201திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - (ப்ரபந்நர்கட்கு ஆகிஞ்சன்யம், அநந்ய கதித்வம் என்ற இரண்டும் குலையாதிருக்கவேணும்.) 8
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன் வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா! தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8
பதவுரை Show / Hide
வளைவாய் நேமிபடையாய்,valaivay nemipadaiyaay - வளைந்த வாயையுடைய திருவாழியை ஆயுதமாகவுடையவனே!
குடந்தை கிடந்த,kudandai kitandha - திருக்குடந்தையிலே சயனித்தருள்கின்ற
மா மாயா,ma maaya - மஹாச்சர்யரூபனே!
துன்பம் களைவாய்,thunbam kalivaay - எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி
களைமா தொழிவாய்,kalaimaa thozhivaay - களையாவிட்டாலும் சரி
களைகண் மற்று இலேன்,kalaikan matru ilen - வேறு சரணமுடையேனல்லேன்;
உடலும் தளரா,udalum thalarā - உடல் தளர்ந்து
எனது ஆவி,enathu aavi - என் உயிரானது
சரிந்து பொம் போது,sarindhu pom podhu - நிலைகுலைந்து உத்க்ரமணமடையும்போது
இளையாது,ilaiyathu - மெலியாமல்
உன் தான்,un thaan - உன் திருவடிகளையே
ஒருங்க பிடிந்து போது,orungga pitinthu pothu - ஒருமிக்கப் பிடித்துப் போகும்படி
நீயே இசை,neeye isai - நீயே திருவுள்ளம்பற்ற வேணும்.