திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3136 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3136திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (பகவத் பக்தர்கள் இருவகைப் படுவார்கள். பலவகைக் கைங்கரியங்களைச் செய்து போது போக்குவாரும், குணாநுபவத்திலே ஊன்றிப்போருவாரும், அப்படிப்பட்ட பக்தர்கள் பூமியெங்கும் பரந்தார்கள்) 9
மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9
பதவுரை Show / Hide
வேதம் புனிதம் இருக்கை,Vedham Punitam Irugai - வேதத்தினுள் பரமபவித்திரமான புருஸூக்தம் முதலியவற்றை
நாவில் கொண்டு,Naavil Kondhu - நாவினால் உச்சரித்துக்கொண்டு
ஞானம் விதி பிழையாமே,Gnanam Vidhi Pizhaiyaame - பக்திமார்க்கம் தவறாதபடி
பூவில்,Poovil - மலரோடு கூடின
புகையும்,Pugaiyum - தூபமும்
விளக்கும்,Vilakum - தீபமும்
சாந்தமும்,Saanthamum - சந்தனமும்
நீரும்,Neerum - திருமஞ்சனமும்
மலிந்து,Malindhu - பூர்ணமாகக்கொண்டு
அச்சுதன் தன்னை,Achchudhan Thannai - எம்பெருமானை
மேவி,Mevi - அடைந்து
தொழும்,Thozhum - ஸாங்கரியம் செய்கிற
அடியாரும்,Adiyarum - அடியார்களையும்
பகவரும்,Bhagavarum - குணாநுபவ ரிஷ்டர்களையும்
உலகு மிக்கது,Ulaku Mikkatu - இவ்வுலகமானது அதிகமாகக் கொண்டது (ஆன பின்பு)
நீங்கள்,Neengal - நீங்கள்
மேவிதொழுது.,Mevi Thozhudhu - (அவர்களை) விரும்பி வணங்கி
உய்ம்மின்,Uymin - உஜ்ஜீவியுங்கள்.