திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3104 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (கீழ்ப் பாசுரத்தில் ப்ரஸங்கித்த பேற்றை உகப்பின் மிகுதியாலே இன்னமும் பன்னி யுரைக்கின்றாரிதில்.) 10 | கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10 | பதவுரை Show / Hideஒண் தொடியாள்,On thodiyal - அழகிய கைகளையுடையளாகிய திரு மகளும்,Thiru magalum - பெரிய பிராட்டியாரும் நீயுமே,Neeyume - அவளுடைய நாயகனான நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர்,Nila nirpa kanda sadhir - களித்து வாழ்கிற அழகிய இருப்பை கண்டு,Kandu - இப்போது காணப்பெற்று கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம்,Kandu kettu urru mondu undu uzhalum aingaruvi kanda inbam - காண்பது கேட்பது தொடுவது மோருவது உட்கொள்ளுவதாகிற வேலைகளைச் செய்துகொண்டு அலைகின்ற பஞ்சேந்திரியங்களுக்கும் வாய்த்த விஷய சுகங்களையும் தெரிவு அரிய அளவு இல்லா சிறு இன்பம்,Therivu ariya alavu illa siru inbam - கைவல்ய ஸூகத்தையும் ஒழிந்தேன்,Ozhindhen - தவிர்க்கப் பெற்றேன்; உன் திரு அடியே அடைந்தேன்,Un thiru ade adaindhen - உனது திருவடிகளை அடையவும் பெற்றேன். |