திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3084 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3084திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) ((ஏறாளுமிறையோனும்) ஸௌசீல்யமே வடிவெடுத்த எம்பெருமான் விரும்பாத அழகிற நிறம் எனக்கு ஏதுக்கு? என்கிறாள்.) 1
ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும், கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1
பதவுரை Show / Hide
ஏறு ஆளும் இறையோனும்,Eru aalum iraiyonum - விருஷபவாஹனனான சிவபிரானும்
திசைமுகனும்,Thisaimukanum - நான்முகனும்
திருமகளும்,Thirumagalum - பெரியபிராட்டியாரும்
கூறு ஆளும்,Kuru aalum - ‘இன்னஇடம் இன்னாருடையது’ என்று பங்கிட்டுக் கொண்டு வஸிக்கப்பெற்ற
தனி உடம்பன்,Thani udamban - விலக்ஷ்ணமான திருமேனியையுடையவனும்,
அசுரர்களை,Asurargalai - அசுரர்களை
குலம் குலம் ஆ,Kulam kulam aa - கூட்டங் கூட்டமாக
நீறு ஆகும்படி ஆக,Neeru aagumbadi aaga - சுடநீறாகி யொழியும்படியாக
நிருமித்து,Nirumiththu - ஸங்கல்பித்து
படை தொட்ட,Padai thotta - (அவ்வளவேயன்றிக்கே) ஆயதங்கொண்டும் காரியஞ் செய்த
மாறு ஆளன்,Maaru aalan - எதிர்த்தலையுடையனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
மணி மாமை,Mani maamai - அழகிய நிறத்தில்
குறைவு இலம்,Kuraivu ilam - அபேஷையுடையோமல்லோம்.