திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3063 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3063திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (க்ஷுத்ர தெய்வங்களைக் குறித்துப்பண்ணும் சாந்திகளால் இவளுடைய நோய் போக்க வரிது; எம்பெருமானுடைய லக்ஷ்ணங்களைச் சொல்லில் இவளைப் பெறலாமென்கிறாள்.) 2
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம் இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2
பதவுரை Show / Hide
(அன்னைமீர்),Annai meer - தாய்மார்களே!,
திசைக்கின்றதே,Thisaikkindradhe - நீங்கள் இப்படியும் அறிவு கெடலாகுமோ?
இவள் நோய் இது,Ival noy idhu - இப்பெண்பிள்ளைக்கு உண்டாகியிருக்கின்ற இந்நோயானது
மிக்க பெரு தெய்வம்,Mikha peru dheivam - பராத்பரமான தெய்வமடியாக வந்தது;
இசைப்பு இன்றி,Isaippu indri - தகுதியில்லாதபடி
நீர்,Neer - நீங்கள்
அணங்கு ஆடும்,Anangu aadum - வெறியாடுவிக்கின்ற
இள தெய்வம் அன்று இது,Ila dheivam andru idhu - க்ஷு த்ரதெய்வமடியாக வந்ததன்று இது; (ஆதலால்)
திசைப்பு இன்றியே,Thisaippu indriye - மனக்குழப்பம் தவிர்ந்து
நீர்,Neer - நீங்கள்
இவள்கேட்க,Ival kaetka - இப்பெண்பிள்ளையின் காதில் விழும்படியாக
சங்கு சக்கரம் என்று,Sanghu sakkaram endru - சங்கென்றும் சக்கரமென்றும்
இசைக்கிற்றிர் ஆகில்,Isaikkindrir aagil - சொல்ல வல்லீர்களானால்
தன்றே,Thandre - நலமாகவே
இல் பெறும்;,Elperum - (இவள்) இல்லிருப்பப் பெறும்படியாகும்:
இது காண்மின்,Idhu kaanmin - இங்ஙனே நடத்திப் பாருங்கள்.