திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2970 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2970திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (அவனுடைய ஸகலஸம்பத்துக்கும் நிதானமான ஸ்ரீயபதித்வத்தை அநுஸந்தித்து அதிலே யீடுபட்டிருக்குமவர்கள் குலம் குலமாக எனக்கு நாதர் என்கிறார்.) 8
நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச் கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர் எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8
பதவுரை Show / Hide
நம்பனை,Nambanai - நம்பப்படுமவனும்
ஞானம் படைத்தவனை,Gnaanam padaithavanai - (தன்னை ஆச்ரயித்து அநுபவிக்கைக்குறுப்பாக) ஜகத்ஸ்ருஷ்டியைப் பண்ணுமவனும்
திருமார்பனை,Thirumaarbanai - பிராட்டியைத் திருமார்பிலே உடையவனும்
உம்பர் உலகினில்,Umbar ulaginil - மேலுலகங்களில்
யார்க்கும்,Yaarkkum - எப்படிப்பட்டவர்களுக்கும்
உணர்வு அரியான் தன்னை,Unarvu ariyaan thannai - அறியமுடியாத பெருமையையுடையவனுமான எம்பெருமானை
ஏத்துவர் கும்பிநரகர்கள் ஏலும்,Yeththuvaar kumbinaragargal yaelum - துதிப்பவர்கள் கும்பியாக நரகவாஸத்திற்குரிய பாபிகளேயானாலும்
அவர் தாங்கள்,Avar thaangal - அவர்கள்
எம்,Em - எமது
பல்,Pal - பலவகைப்பட்ட
பிறப்பு இடைதோறு,Pirappu idai thoru - ஜன்மாவகாசந் தோறும்
எம் தொழுகுலம் கண்ணீர்,Em thozhukulam kannir - யாம் தொழும்படியான குலீகராவர்.