திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2952 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2952திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (புண்டரீகாக்ஷத்வம் ஜகத் காரணத்வம் முதலிய குணங்களையுடைய எம்பெருமானே ஆச்ரயணீய னென்கிறார்.) 1
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர் வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய் செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்பட்டு இவை படைத்தான் பின்னும் மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1
பதவுரை Show / Hide
செய்யதாமரை கண்ணன் ஆய் உலகு ஏழும்,Seyyaathamarai kannan aai ulagu ezhum - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையனாய்
உலகு ஏழும்,Ulagu ezhum - ஸகலலோகங்களையும்
உண்ட அவன்,Unda avan - (ஒரு சமயத்தில்) திருவயிற்றிலே வைத்து நோக்கினவனாய்
வையம்,Vaiyam - பூமியும்
வானம்,Vaanam - விண்ணுலகங்களும்
மனிசர் தெய்வம்,Manisar deivam - (முறையே அவற்றில் வாழ்கின்ற) மனிதரும் தேவதைகளும்
மற்றும்,Matrum - மற்ற விலங்குகளும்
மற்றும்,Matrum - மற்ற ஸ்தாவரங்களும்
மற்றும்,Matrum - மற்றுமுள்ள பஞ்ச பூதங்களும்
முற்றும் ஆய்,Mutrum aai - மற்றுமுள்ள ஸகலமும் (காரணதசையில்) தன்னுள்ளே அடங்கப்பெற்றவனாய்
செய்ய சூழ் சுடர் ஞான ஆய்,Seyya oozh sudar nyana aai - சிறந்ததும் வியாபகமும் ஒளிமயமுமான ஸங்கல்பஜஙஞானத்தை யுடையனாய்
வெளிப்பட்டு,Velippattu - ஸ்ருஷ்டியை உத்தேசித்துத் தோற்றி
இவை,Ivai - முன்சொன்ன இவை யெல்லாவற்றையும்
படைத்தான்,Padaitthaan - ஸ்ருஷ்டித்தவனாய்
பின்னும்,Pinnum - அதற்குமேலும்
மொய் கொள் சோதியோடு ஆயினாள்,Moy kol sothiyodua aainal - செறிந்த தேஜோமயமான பரமபதத்தை நிலயமாகவுடையனாயிருக்கின்ற எம்பெருமான்
ஒரு மூவர் ஆகிய மூர்த்தி கண்டீர்,Oru moovar aagiya moorthi kandir - ப்ரஹம் விஷ்ணு சிவரூபியாய் நின்ற ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை நிர்வஹிப்பவன் காண்மின்