திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2929 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2929திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (இத் திருவாய் மொழியை ஓதவல்லவர்கள் உலகமெல்லாங் கொண்டாடும் படியான வாழ்ச்சியைப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.) 11
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை, நீள் பொழில் குரு கூர்ச் சட கோபன் சொல், கேழில் ஆயிரத்திப் பத்தும் வல்லவர், வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.–3-3-11
பதவுரை Show / Hide
தாள் பரப்பி, thaal parappi - திருவடியை விரித்து
மண் தாவிய, man thaaviya - பூமியெல்லாம் அளந்து கொண்ட
ஈசனை, eesanai - எம்பெருமானைக் குறித்து
நீள் பொழில், neel pozhil - உயர்ந்த சோலைகளையுடைய
குருகூர் சடகோபன், kurugoor sadagopan - ஆழ்வார்
சொல், sol - அருளிச்செய்த
கேழ் இல், kezh il - ஒப்பற்றதான
ஆயிரத்து, aayirathu - ஆயிரத்தில்
இப் பத்தும், ip pathum - இத்திருவாய்மொழியை
வல்லவர், vallavar - ஓதவல்லவர்கள்
ஞாலம் புகழ, nyaalam pugazha - உலகம் யாவும் கொண்டாடும் படி
வாழ்வு எய்தி, vaazhvu eidhi - வாழ்ச்சிபெற்று
வாழ்வர், vaazhvar - (அந்த வாழ்ச்சி ஒருநாளும் குன்றாமே) விளங்குவர்.