திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2883 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2883திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (தேவரீருக்கும் எனக்கும் ஸ்ம்பந்தம் அநாதிஸித்தமர்கவேயிருந்தும், அந்தோ! நெடுநாளாக அதனை மறந்து அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு அநுதபிக்கிறார்.) 9
யானே என்னை யறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9
பதவுரை Show / Hide
வானே ஏத்தும்,Vaane etthum - விண்ணுலகம் முழுவதும் துதிக்குமாறு உள்ள
எம் வானவர் ஏறே,Em vaanavar aere - நித்யஸூரிநாதனான எம் பெருமானே!
யானே,Yaane - நான் தானே
என்னை,Ennai - என்னை
அறிய கிலாதே,Ariya kilaadhe - அறியமாட்டாமல்
யானே நீ,Yaane nee - யான் நீயே யென்னலாம்படி வேற்றுமையற்றிருப்பேன்;
யானே என் தனதே என்று இருந்தேன்,Yaane en thanadhe endru irundhaen - அஹங்கார மமகாரங்கள் கொண்டிருந்தேன்.
என் உடைமையும் நீயே,En udaimaiyum neeye - (இப்போது அவை தவிர்ந்து நான் அநுஸந்திக்கும் வகை யாதெனில்) எனது உடைமைகளும் நீயிட்ட வழக்காயிருக்கும் (என்பதே)