திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2864 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2864திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (இப்பதிகத்தில் கூறப்படும் பொருள். இப்பாசுரத்தில் சுருங்க வருளிச் செய்யப்படுகிறது.) 1
அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது இருவரவர் முதலும் தானே இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம் புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1
பதவுரை Show / Hide
அரவு அணை மேல்,Aravu Anai Mel - ஆதிசேஷ சயனத்தின் மீது
அணைவது,Anaivadhu - சேர்வது
பூ பாவை ஆகம் புணர்வது,Poo Paavai Aagam Punarvadhu - பெரிய பிராட்டியின் திருமேனியைக் கூடுவது; (ஆகிய இவை நித்ய விபூதியில் எம்பெருமானுடைய காரியங்கள்)
அவர் இருவர்,Avar Iruvar - ப்ரஸித்தர்களான பிரமன் ருத்ரன் என்கிற இருவர்க்கும்
முதலும் தானே,Mudhalum Thaane - முதல்வனும் அப்பெருமான் தானேயாயிருப்பன்; (அவதார முகத்தாலே)
எப்பொருட்கும்,Epporudkum - எல்லாப் பொருளுக்கும்
இணைவன் ஆம்,Inaivan Aam - ஸஜாதீயனாயிருப்பன்;
வீடு முதல் ஆம்,Veedu Mudhal Aam - மோக்ஷத்தை யளிப்பவனுமவனே;
பிறவி கடல்,Piravi Kadal - ஸம்ஸார ஸமுத்ரத்தை
நீந்துவார்க்கு,Neenthuvaarku - நீந்திக் கரையேற விரும்புமவர்கட்கு
புணைவன்,Punai Van - தெப்பமாயிருப்பவனுமவனே.