திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2860 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2860திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (இங்ஙனம் மஹோபகாரகனான எம்பெருமானை ஒருநாளும் விடலாகாதென்று நெஞ்சுக்கு உரைக்கும் முகத்தால். தம்முடைய அத்யவஸாயத்தை வெளியிடுகிறார்) 10
இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10
பதவுரை Show / Hide
நெஞ்சே,Nenje - மனமே!
தெருடி ஆகில்,Therudi Aagil - நீ அறிவுடையை யாகில்
இருடீகேசன் என்று,IrudiKesane Endru - ஹ்ருஷீகேசனே யென்றும்
எம்பிரான் என்று,Empiran Endru - எம்பிரானே யென்றும்
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த,Ilankai Arakkar Kulam Murudu Theertha - இலங்கையிலிருந்த ராக்ஷ குலத்திற்கு முருடான ராவணனைத்
பிரான் என்று,Piran Endru - தொலைத்த பிரானே யென்றும்
எம்மான் என்று,Emman Endru - எம்பெருமானே யென்றும்
அமரர் பெம்மான் என்று,Amarar Pemman Endru - நித்யஸூரிநாதனே யென்றும் சொல்லி
வணங்கு,Vanangu - அவனை வணங்கு;
திண்ணம் அறி,Thinnam Ari - இதைத் திடமாக அறிவாயாக;
அறிந்து,Arindhu - அறிந்தபின்
மருடி ஏலும்,Marudi Yelum - (மீண்டும்) சுலங்குவாயாகிலும்
நம்பி பற்பநாபனை,Nambi Parpanabanai - குணபரிபூர்ணனான பத்மநாபனை
விடேல் கண்டாய்,Videl Kandaai - விடாதே கொள்.