திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2822 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2822திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (பெண்பிள்ளையின் தயநீயதசையைச் சொல்லி, இந்த நிலைமையிலும் நீர் இவள் திறத்து இரங்குகின்றீலீரே! உம்முடைய தயை எங்கே போயிற்று? என்கிறாள்.) 5
இவள் இராப் பகல் வாய் வெரீஇத் தன் குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என தவள வண்ணர் தகவுகளே –2-4-5
பதவுரை Show / Hide
இவள்,Ival - இப் பெண்பிள்ளை
இரா பகல்,Iraa pagal - இரவும் பகலும்
வாய் வொரி இ,Vaai vori e - வாய்பிதற்றி
தன்,Than - தன்னுடைய
குவலை ஒண் கண்,Kuvalai on kan - நெய்தல் மலர்போன்றழகிய கண்களில்
நீர்கொண்டாள்,Neer kondaal - நீரையுடையளானாள்;
வண்டு,Vantu - வண்டுகள்
திவளும்,Thivalum - படிகின்ற
தண் அம் துழாய்,Than am thuzhaay - குளிர்ந்தழகிய தருத் துழாய் மாலையை
கொடீர்,Kodeer - தருகின்றீரில்லை;
தவளம் வண்ணா,Thavalam vanna - பரிசுத்தாத்மாவான தேவரீருடைய
தகவுகள்,Thagavugal - கிருபைமுதலிய குணங்கள்
என,Ena - என்னே!