திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2772 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2772திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பிரமன் சிவனிந்திரன் முதலான மஹான்களுங்கூடத் தன்னைப் பெறுதற்கு ஸமயம் எதிர்பார்த்திருப்பாராய்த் தடுமாறும்படி யிருக்கிறவன் தான் என்னைப் பெறுகைக்கு அவஸரம் பார்த்து வந்து என் தலைமீது ஏறிவிட்டானென்கிறார்.) 10
நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார் ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும் மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10
பதவுரை Show / Hide
ஒற்றை பிறை அணிந்தாலும்,otrai pirai aninthalum - சந்திரசேகரனாகிய சிவபெருமானும்
நான்முகனும்,naanmuganum - பிரம தேவனும்
இந்திரனும்,indiranum - தேவேந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம்,matrai amararum ellaam - மற்றுமுள்ள எல்லாத் தேவர்களும்
வந்து,vanthu - கிட்டி,
நெற்றியுள்,netriyul - நெற்றியில் படிந்திருந்து
நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி,ninru ennai aalum nirai malar paadhangaal soodi - என்னை யாள்கின்ற மலரொழுங் கமைந்த திருவடிகளை (த்தங்கள் தலையிலே) சூடிக் கொண்டு
கற்றை துழாய் முடிகோலம் கண்ணபிரானை,katrai thuzhaay mudikolam kannabiraanai - செறிந்த திருத்துழாயாகிற வளைய மணிந்த எம்பெருமானை
தொழுவார்,thozhvaar - வணங்கா நிற்பர்கள்; (அத்தகைய பெருமை வாய்ந்த எம்பெருமான்)
எனது உச்சி உளான்,enathu ucchi ulan - என் தலையின் மேலே யானான்.