திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2675 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2675திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (இதில், மஹோபகாரங்களைத் தமக்குச் செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்.) 1
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1
பதவுரை Show / Hide
என் மனனே, En manane - எனது மனமே!
உயர்வு அற, Uyarvu ara - (தன்னைப் பார்க்கிலும்) உயர்த்தி இல்லதாபடி
உயர், Uyar - உயர்ந்த
நலம், Nalam - (ஆனந்தம் முதலிய) கல்யாண குணங்களை.
உடையவன், Udayavan - (சுயமாக) உடையனானவன்
யவனவன், Yavanavan - யாவனொருவனோ
மயர்வு அற, Mayarvu ara - அஜ்ஞானம் நசிக்கும்படி
மதி நலம், Mathi nalam - ஞானத்தையும் பக்தியையும்
அருளினன், Arulinan - (அடியேனுக்குக்) கிருபை பண்ணினவன்
யவனவன், Yavanavan - யாவனொருவனோ.
அயர்வு அறும், Ayarvu arum - மறப்பு இல்லாத
அமரர்கள், Amaragal - நித்ய ஸூரிகளுக்கு
அதிபதி யவன், Adhipathi yavan - ஸ்வாமி யாவனொருவனோ
அவன், Avan - அந்த எம்பெருமானது
துயர் அறு சுடர் அடி, Thuyar aru sudar adi - துயர் அறப் பெற்ற சோதி மயமான திருவடிகளை
தொழுது, Thozhudhu - வணங்கி
எழு, Ezhu - நீ கடைத்தேறக் கடவை.