திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2472 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2472நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே உபாய உபேயங்கள் என்று உறுதி கொண்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உபய விபூதில் உள்ளார்க்கும் நிர்வாஹகராகும் படியான பெருமையை யுடையவர்கள் -என்கிறார் – நித்ய சூரிகளோபாதி இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்-ப்ரஹ்மாதிகளுக்கு பூஜ்யர் -என்றபடி 91
தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும் அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் – அமரர்கள் தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன் தாள்தா மரையடைவோ மென்று.
பதவுரை Show / Hide
மால் வண்ணன்,Maal Vannan - கரியமேனியனான எம்பெருமானுடைய
தாள் தாமரை,Thaal Thaamarai - திருவடித் தாமரைகளில்
மலர்கள் இட்டு,Malargal Ittu - புஷ்பங்களை ஸமர்ப்பித்து
இறைஞ்சி,Irainji - வணங்கி
தாள் தாமரை அடைவோம் என்று,Thaal Thaamarai Adaivom Endru - அத்திருவடித்தாமரைகளை யடைவோமென்று
தமர் ஆவார்,Thamar Aavaar - பக்தராயிருக்குமவர்கள்
தாமரை மேலாற்கும்,Thamarai Melarkum - திருநாபிக் கமலத்திற் பிறந்த பிரமனுக்கும்
ஆடு அரவு ஆர்த்தாற்கும்,Aadu Aravu Aartharkum - ஆடுகின்ற ஸர்ப்பங்களை (ஆபரணமாக உடம்பிலே) கட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கும்
அமரர்க்கும்,Amararukkum - நித்யஸூரிகளுக்கும்
யாவர்க்கும்,Yaavarkkum - மற்றுமெல்லார்க்கும்
அமரர்கள்,Amararhal - மேற்பட்டவராவர்