திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2463 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2463நான்முகன் திருவந்தாதி || ப்ரஹ்மாதிகளும் அறிய ஒண்ணாத படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான் – இது போலே இருக்கும் நன்மை யுண்டோ -என்கிறார்- செவ்விப் பூக்களை கொண்டு ஏத்துகிற ருத்ரனும் சதுர்முகனும்-வாய் விட்டு ஏத்த மாட்டாத- ஸ்ரீ சர்வாதிகன் என் உள்ளத்தைக் கலந்தான் -அவ்வழகையும் மேன்மையும் உடையவன் என்கை- 82
கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள் இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள் விட்டு ஏத்த மாட்டாத வேந்து
பதவுரை Show / Hide
காம வேள் தாதை,Kaama Vel Thathai - மன்மதனுக்குத் தந்தையானவனும்
அலர்ந்த அலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும்,Alarntha Alarkal Ittu Aeththum Eesanum - மலர்ந்த பூக்களை ஸமர்ப்பித்துத் துதி செய்கின்ற சிவபிரானென்ன
வேந்து,Veenthu - தேவாதிதேவன்
என் உள்ளத்து,En Ullaththu - எனது நெஞ்சிலே
கலந்தான்,Kalandhaan - சேர்ந்து கொண்டான்
நான்முகனும்,Naanmuganum - பிரமனென்ன
என்ற இவர்கள்,Endra Ivargal - என்கிற (சிறந்த) தேவர்களும்
விட்டு ஏத்த மாட்டாத,Vittu Aeththa Maattadha - நன்றாய்த் துதித்து முடிக்க முடியாதவனுமான
ஈது ஒப்பது நலம் தானும் உண்டேர்,Eethu Oppathu Nalam Thaanum Undaer - இந்த நன்மையோ டொத்த நன்மை வேறுண்டோ? (இல்லை)