திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2450 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2450நான்முகன் திருவந்தாதி || செவிக்கு இனிதாய் இருப்பதும் திரு நாமம் சொன்னார் பக்கல் உள்ள வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய்-வ்யாமுக்தனாய் இருக்கிறவனுடைய திரு நாமம் பூமியில் உள்ளாருக்கும் நிலமதுவே கிடிகோள்- கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால் குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக லபித்தேன் – 69
செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம், புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில் மறைப்பொருளும் அத்தனையே தான்.
பதவுரை Show / Hide
செவிக்கு இன்பம் ஆவதுவும்,Sevikku Inbam Aavadhuvum - கர்ணாமிருதமாயிருப்பதும்
செம் கண்மால் நாமம்,Sem Kanmaal Naamam - புண்டரீகாக்ஷனான எம்பெருமானுடைய திருநாமமே
புவிக்கு,Bhuvikku - பூமியிலுள்ள ரெல்லார்க்கும்
புவியும் அதுவே,Bhuviyum Adhuvae - (நிழல்பெற ஒதுங்குவதற்கு) இடமாவதும் அத்திருநாமமே
கவிக்கு நிறைபொருள் ஆய்நின்றானே,Kavikku Niraiporul Aayninraan - பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருக்குமெம் பெருமானை
நேர்பட்டேன்,Nerpatten - தெய்வாதீனமாக அடையப்பெற்றேன்,
பார்க்கில்,Paarkkil - ஆராய்ந்து பார்த்தால்
மறை பொருளும் அத்தனையே தான்,Marai Porulum Aththanaiye Thaan - வேதங்களில் தேர்ந்த பொருளும் அவ்வளவே.