திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2442 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2442நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் தானே வந்து விஷயீ கரிக்கும் ஐஸ்வர்யம் எனக்கே யுள்ளது என்கிறார்- தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –அது தானும் இன்று- 61
மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை, தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான் இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான், சென்றொன்றி நின்ற திரு.
பதவுரை Show / Hide
மதுசூதன் தன்னை,Madhusoodhan Thannai - மதுவென்னும் அசுரனைக் கொன்றொழித்த பெருமானை
மனம் கேதம்,Manam Ketham - மனவருத்தங்கள்
சாரா,Saraa - வந்துசேராவாம்
ஒன்றி நின்று,Onri Nindru - பொருந்தி நின்று
ஏழ் உலகை,Ezhu Ulagai - ஸப்தலோகங்களிலும்
ஆணை ஒட்டினான்,Aanai Ottinaan - (தன்னுடைய) செங்கோலைச் செலுத்துமவனான) எம்பெருமான்
இன்று,Indru - இப்போது
தனக்கே தஞ்சம் ஆ தான் கொள்ளில்,Thanakke Thanjam Aa Thaan Kollil - தனக்கே ரக்ஷகனென்று ஒருவன் கொண்டால்
சென்று,Sendru - (நிர்ஹேதுகமாக என்னிடம்) வந்து
ஒன்றி நின்ற திரு,Onri Nindra Thiru - (என்னிடத்தில்) பொருந்தி நிற்பதாகிய செல்வமானது
எனக்கே தான்,Enakke Thaan - என்னொருவனுக்கொழிய வேறொருவற்குமில்லை.