திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2400 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2400நான்முகன் திருவந்தாதி || எத்தனையேனும் பிரபல தேவதைகளுடைய வரபலத்தை யுடையவர்கள் ஆனார்களே யாகிலும்- ஆஸ்ரிதரோடு விரோதிக்கில் அவர்களை நிரசிக்கும் -என்கிறார் – ஆஸ்ரிதர் பக்கல் இத்தனை பஷ பாதியோ நான் என்ன -அவற்றை அருளிச் செய்கிறார் ஆகவுமாம்- பிரதானவர்களுக்கும் அறிவு கெடும் இடத்தில்-ரஷிக்கும் நீயே எனக்கு எல்லா வித அபிமத சித்தியும் செய்வாய் -என்கிறார் 19
தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம்செய்த ஆழியா யன்றே,- உவந்தெம்மைக் காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம் ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ.
பதவுரை Show / Hide
தவம் செய்து,Thavam Seidhu - தபஸ்ஸை அநுஷ்டித்து
நான்முகனால்,Naanmuganaal - பிரமனிடத்து
பெற்ற,Petra - (ஹிரண்யன் முதலானவர்கள்) பெற்றுக் கொண்ட
வரத்தை,Varaththai - வரங்களை
அவம் செய்த,Avam Seidha - பழுதாக்கின
ஆழியாய்,Aazhiyaai - திருவாழிக் கையனான பெருமானே!
எம்மை,Emmai - அடியோங்களை
உவந்து,Uvandu - திருவுள்ளமுகந்து
காப்பாய் நீ அன்றே,Kaappai Nee Andrae - காத்தருள்பவன் நீயேயன்றோ,
காப்பதனை ஆவாய் நீ அன்றே,Kaappadhanai Aavaai Nee Andrae - காக்க வேணு மென்கிற ஸங்கல்ப முடையவனும் நீயன்றோ,
எவ் உயிர்க்கும்,Ev Uyirkkum - (உன்னை ஆச்ரயித்த) ஸகலாத்மாக்களுக்கும்
வைகுந்தம்,Vaikundham - பரமபதத்தை
ஈப்பாயும்,Eippaayum - அளிப்பவனும்
நீ அன்றே,Nee Andrae - நீயன்றோ.