திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2389 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2389நான்முகன் திருவந்தாதி || நிருபாயராகை யன்றோ நெடுங்காலம் நாம் இழந்தது-உபாய அனுஷ்டானத்தைப் பண்ணினாலோ வென்று திரு உள்ளம் கேட்க உபாய அனுஷ்டான சக்தர் அல்லாத நமக்கு-தசரதாத்மஜன் அல்லது துணையில்லை -என்கிறார் – உன்னை ஒழிய வேறு ஓன்று அறியேன் என்கிறது என் என்னில்– வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே என்கிறார் – 8
இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற சிலைகொண்ட செங்கண்மால் சேரா – குலைகொண்ட ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த கூரம்பன் அல்லால் குறை.
பதவுரை Show / Hide
என் நெஞ்சை,En Nenjai - எனது மனமே!
ஈசனை வென்ற,Eesanai Vendra - ருத்ரனை ஜயித்த
சிலைகொண்ட,Silaikonda - வில்லை (பரசுராமனிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
செம் கண் மால்,Sem Kan Maal - புண்டரீ காக்ஷனாகிய தன்னை
சேரா,Sera - பணிந்து உய்வு பெற மாட்டா தொழிந்த
குலை கொண்ட ஈரைந் தலையான்,Kulai Konda Eirain Thalaiyaan - கொத்துப்போலே நெருங்கிக் கிடந்த பத்துத் தலைகளை யுடையவனான இராவணனுடைய
இலங்கையை,Ilankaiyai - லங்காபுரியை
ஈடு அழித்த,Eedu Azhitha - சீர்கெடுத்த
கூர் அம்பன் அல்லால்,Koora Amban Allaal - கூர்மைதாங்கிய அம்புகளையுடையவனான இராமபிரானைத் தவிர்த்து
குறை,Kurai - விரும்பத்தகுந்த
மற்ற துணை,Mattra Thunai - வேறொரு துணைவன்
இலை,Ilai - நமக்கு இல்லை.