திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2272 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2272இரண்டாம் திருவந்தாதி || பிரகிருதி வச்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒருவகை தப்பாது- ஆன பின்பு அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கள் என்கிறார் – திருவடிகளிலே தலையைச் சாய்த்து யமன் தலையிலே காலை வைத்துத் திரியுங்கள் – அர்த்தஸ் சமய ப்ராப்தா -என்கிறபடியே-ஒன்றிலே எல்லாம் உண்டான விஷயம் – பிரகிருதி வச்யரான பின்பு நரகம் ஒருவனைத் தப்பாது -அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கோள்- பிரகிருதி வஸ்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒரு வகை தப்பாது – ஆன பின்பு அவன் திருவடிகளை வணங்கப் பாருங்கோள் என்கிறார்- 91
பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர், முன்னால் வணங்க முயல்மினோ, – பன்னூல் அளந்தானைக் கார்க்கடல்சூழ் ஞாலத்தை, எல்லாம் அளந்தா னவஞ்சே வடி.
பதவுரை Show / Hide
பின்னால், Pinnaal - சரீரம் விழுந்தபின்பு
அரு நகரம், Aru Nagaram - கடினமான நரகத்தை
சேராமல், Seramal - அடையாமலிருக்கும் படிக்கு
பேதுறுவீர், Paethuruveer - மனங்கலங்கியிருக்கும் மனிசர்களே!
பல் நூல், Pal Nool - பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களினால்
அளந்தானை, Alandhanai - நிச்சயிக்கப்படுபவனும்
கார் கடல்சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன், Kaar Kadalsuzh Nyalathai Ellam Alandhanavan - கரிய கடல் சூழப்பட்ட பூமியையெல்லாம் அளந்து கொண்டவனுமான எம்பெருமானுடைய
சே அடி, Sae Adi - செவ்விய திருவடிகளை
முன்னால், Munnal - இப்போதே
வணங்க, Vananga - வணங்குமாறு
முயல்மின், Muyalmin - முயற்சிசெய்யுங்கள்.