திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2236 | இரண்டாம் திருவந்தாதி || இப்படி தேவர் என் பக்கலில் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தால் குறை யற்றேன் – அதனுடைய பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவரே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் உன்னை நினைக்காக அரிதான சம்சாரத்திலே உன்னை நினைக்கும் படி பண்ணினாய் – இனி ப்ராப்தி யளவும் பண்ணாய் -என்கிறார்- உன்னை நினைக்கை அரிதான சம்சாரத்திலே-உன்னை நினைக்கும் படி பண்ணினாய் இனி பிராப்தி அளவும் பண்ணாயோ என்கிறார் – இப்படி தேவர் என் பக்கல் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தில் குறைவற்றேன் தத் பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவர் தாமே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் – 55 | என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
நின்று நினைப்பொழியா நீர்மையால், – வென்றி
அடலாழி கொண்ட அறிவனே, இன்பக்
கடலாழி நீயருளிக் காண். | பதவுரை Show / Hideவென்றி, Vendri - ஜய சீலமாய் அடல், Adal - திக்ஷணமான ஆழி, Aazhi - சக்கரத்தை அறிவனே, Arivane - ஸர்வஜ்ஞனான பெருமானே! ஏழ் விறப்பும், Ezhu Virappum - இப்படியிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும் எப்பொழுதும், Eppozhudum - எல்லா அவஸ்தைகளிலும் நின்று நினைப்பு ஒழியா நீர்மையால், Ninru Ninaippu Ozhia Neermiyal - ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால் என்றும் மறந்தறியேன், Endrum Marandariyen - உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன் இன்பம் கடல் ஆழி, Inbam Kadal Aazhi - ஆநந்த ஸாகரத்தையும் அருளிக்காண், Arulikkaan - எனக்கு அருள வேணும். |