திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2236 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2236இரண்டாம் திருவந்தாதி || இப்படி தேவர் என் பக்கலில் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தால் குறை யற்றேன் – அதனுடைய பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவரே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் உன்னை நினைக்காக அரிதான சம்சாரத்திலே உன்னை நினைக்கும் படி பண்ணினாய் – இனி ப்ராப்தி யளவும் பண்ணாய் -என்கிறார்- உன்னை நினைக்கை அரிதான சம்சாரத்திலே-உன்னை நினைக்கும் படி பண்ணினாய் இனி பிராப்தி அளவும் பண்ணாயோ என்கிறார் – இப்படி தேவர் என் பக்கல் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தில் குறைவற்றேன் தத் பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவர் தாமே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் – 55
என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும், நின்று நினைப்பொழியா நீர்மையால், – வென்றி அடலாழி கொண்ட அறிவனே, இன்பக் கடலாழி நீயருளிக் காண்.
பதவுரை Show / Hide
வென்றி, Vendri - ஜய சீலமாய்
அடல், Adal - திக்ஷணமான
ஆழி, Aazhi - சக்கரத்தை
அறிவனே, Arivane - ஸர்வஜ்ஞனான பெருமானே!
ஏழ் விறப்பும், Ezhu Virappum - இப்படியிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும், Eppozhudum - எல்லா அவஸ்தைகளிலும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால், Ninru Ninaippu Ozhia Neermiyal - ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால்
என்றும் மறந்தறியேன், Endrum Marandariyen - உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன்
இன்பம் கடல் ஆழி, Inbam Kadal Aazhi - ஆநந்த ஸாகரத்தையும்
அருளிக்காண், Arulikkaan - எனக்கு அருள வேணும்.