திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2211 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2211இரண்டாம் திருவந்தாதி || கீழே ஸ்ரீ கிருஷ்ண விஜயத்தையும் ஸ்ரீ ராம விஜயத்தையும் அனுசந்தித்தார் – அநந்தரம்-அத்தோடு சேர்ந்த அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்துப் ப்ரீதர் ஆகிறார்- எல்லார் தலையிலும் ஒக்க திருவடிகளை–வைத்த அவதாரத்தை சொல்லுகிறது இப்படி ஸ்ரீ கிருஷ்ண விஷயமும் ஸ்ரீ ராம விஷயமும் அனுசந்தித்த பிரசங்கத்தில் அவற்றோடே சேர்ந்த அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து ப்ரீதராகிறார் – 30
நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே, நீயன் றுலகிடந்தா யென்பரால், – நீயன்று காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை, பேரோத மேனிப் பிரான்.
பதவுரை Show / Hide
பேர் ஓதம் மேனி பிரான், Peer Otham Meeni Piraan - பெரிய கடல் போன்ற திருமேனியையுடைய பெருமானே!
நீண்ட திருமாலே, Neenda Thirumaale - எண்ணுதற்கு அரிய பெருமை படைத்த திருமாலே
நீ, Nee - இப்படிப்பட்ட நீ
அன்று, Andru - முன்பொருகால்
உலகு, Ulaku - உலகங்களை
அளந்தாய், Alandhai - (திரிவிக்கிரமனாகி) அளந்து கொண்டாய் (என்றும்)
நீ, Nee - நீ
அன்று, Andru - மற்றுமொரு காலத்தில்
உலகு, Ulaku - பூமியை
இடந்தாய், Idandhai - (மஹாவராஹமாகி) அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொணர்ந்தாய் (என்றும்)
கார் ஓதம் முன் கடைந்து, Kaar Otham Mun Kadaindhu - கரிய கடலை முன்னே கடைந்தா யென்றும்
மா கடலை, Maa Kadalai - (அந்தப் பெரிய கடல் தன்னையே)
பின், Pin - பிறகு (ராமவதாரத்திலே)
அடைத்தாய், Adaiththai - அணைகட்டித் தூர்த்தாயென்றும்
என்பர், Enbar - (மஹர்ஷிகள்) சொல்லுகின்றனர்.