திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2171 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2171முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) போலியைக் காட்டித் தம்மைத் தரிப்பித்த பிரசங்கத்தைக் கொண்டு அநு கூலனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு அவ்வடிவைக் கொண்டு முன்னே நின்று அவன் விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுத்த படி சொல்லுகிறார் – நரசிம்ஹ ரூபியான ஈஸ்வரன் உடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தையும் வாத்சல்யத்தையும் அனுசந்திக்கிறார் – 90
வரத்தால் வலிநினைந்து மாதவநின் பாதம், சிரத்தால் வணங்கானா மென்றே, – உரத்தினால் ஈரரியாய் நேர்வலியோ னாய இரணியனை, ஓரரியாய் நீயிடந்த தூன்?
பதவுரை Show / Hide
மாதவ, Maadhava - திருமாலே!
ஈர் அரி ஆய், Eer Ari Aayi - (இரண்டு கூறாகக்) கிழித்துப் போடவேண்டிய சத்துருவாகி
நேர் வலியோன் ஆய், Ner Valiyon Aayi - எதிர்த்து நின்று போர் செய்யும் வலிவையுடையனாகிய
இரணியனை, Iraniyanai - ஹிரண்யாஸுரனது
ஊன், Oon - சரீரத்தை ,
ஓர் அரிஆய், Oor Ariyaayi - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாகி
உரத்தினால், Uraththinaal - உனது மிடுக்கினாலே
நீ இடந்தது, Nee Idandhadhu - நீ உன் நகங்களினால் குத்திக் கீண்டதானது,
வரத்தால், Varaththaal - (பிரமன் முதலானவர்கள் கொடுத்த) வரத்தினால் (தனக்கு உண்டான)
வலி, Vali - பலத்தை
நினைந்து, Ninaindhu - பெரிதாக மதித்து
நின் பாதம், Nin Paatham - உனது திருவடிகளை
சிரத்தால், Siraththaal - தனது தலையினால்
வணங்கானாம் என்றே, Vanangaanam Endrae - வணங்காமலிருந்தானென்ற காரணத்தினாலோ? (அன்று; பக்தனான ப்ரஹ்லாதனை நலிந்தானென்ற காரணத்தினாலே.)