திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2107 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவ்வோ அவதாரங்களில் உதாவாதார் உடைய இழவும் தீர்க்கைக்காக திருமலையிலே புகுந்து நின்றான் கிடீர் என்கிறார் 26 | எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை | பதவுரை Show / Hideஎழுவார், எழுவார் - (தாங்கள் விரும்பின ஐச்வரியம் கிடைத்தவுடனே எம்பெருமானைக்) கைவிட்டுப் போகின்ற ஐச்வர்யார்த்திகளும் விடை கொள்வார், விடை கொள்வார் - (தாங்கள் விரும்பின கைவல்யமோக்ஷம் கைப்பட்டபின் எம்பெருமானைத் திரும்பிப்பாராமல்) விடைப்பெற்றுக் கொண்டு போமவர்களான கைவல்யார்த்திகளும் ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார், ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் - இனிய திருத்துழாயை அணிந்தவனான திருமாலை ஒருநாளும் விட்டு நீங்காதபடி சிந்தித்து எப்போதும் அநுபவிப்பவர்களான முமுக்ஷூக்களுமாகிய இம் மூவகை அதிகாரிகளுடைய வினை சுடரை, வினை சுடரை - (அவரவர் வேண்டுகின்ற பலன்களுக்குத் தடையான ) தீவினையாகிய நெருப்பை நந்துவிக்கும், நந்துவிக்கும் - அணைக்கின்ற வேங்கடமே, Venkatame - திருவேங்கடமலையே வானோர், Vaanor - நித்ய ஸூரிகளுடைய மனம் சுடரை, மனம் சுடரை - ஹ்ருதயமாகிற விளக்கை தூண்டும், தூண்டும் - தூண்டி ஜ்வலிப்பிக்கின்ற மலை, Malai - மலையாகும். |