திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2107 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2107முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவ்வோ அவதாரங்களில் உதாவாதார் உடைய இழவும் தீர்க்கைக்காக திருமலையிலே புகுந்து நின்றான் கிடீர் என்கிறார் 26
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை
பதவுரை Show / Hide
எழுவார், எழுவார் - (தாங்கள் விரும்பின ஐச்வரியம் கிடைத்தவுடனே எம்பெருமானைக்) கைவிட்டுப் போகின்ற ஐச்வர்யார்த்திகளும்
விடை கொள்வார், விடை கொள்வார் - (தாங்கள் விரும்பின கைவல்யமோக்ஷம் கைப்பட்டபின் எம்பெருமானைத் திரும்பிப்பாராமல்) விடைப்பெற்றுக் கொண்டு போமவர்களான கைவல்யார்த்திகளும்
ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார், ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் - இனிய திருத்துழாயை அணிந்தவனான திருமாலை ஒருநாளும் விட்டு நீங்காதபடி சிந்தித்து எப்போதும் அநுபவிப்பவர்களான முமுக்ஷூக்களுமாகிய இம் மூவகை அதிகாரிகளுடைய
வினை சுடரை, வினை சுடரை - (அவரவர் வேண்டுகின்ற பலன்களுக்குத் தடையான ) தீவினையாகிய நெருப்பை
நந்துவிக்கும், நந்துவிக்கும் - அணைக்கின்ற
வேங்கடமே, Venkatame - திருவேங்கடமலையே
வானோர், Vaanor - நித்ய ஸூரிகளுடைய
மனம் சுடரை, மனம் சுடரை - ஹ்ருதயமாகிற விளக்கை
தூண்டும், தூண்டும் - தூண்டி ஜ்வலிப்பிக்கின்ற
மலை, Malai - மலையாகும்.