திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2050 | திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானுகந்தருளின திவ்ய தேசங்களிலெங்கும் “பதியே பரவித் தொழுந்தொண்டர்“ என்னும்படியாக அவகாஹித்திருக்கும் அவர்கள் உஜ்ஜீவிக்க வழியுண்டே யல்லது அல்லாதவர்களுக்கு ஒருநாளும் உஜ்ஜீவிக்க வழியில்லை யென்கிறார். 19 | பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே | பதவுரை Show / Hideபிண்டி ஆர் மண்டை ஏந்தி, Pindhi Ar Mandai Aendhi - உளுத்த பொடிகள் உதிருகிற தலை யோட்டைக் கையிலேந்திக் கொண்டு பிறர் மனை, Pirar Manai - அயலாருடைய வீடுகளிலே திரி தந்து, Thiri Thandhu - திரிந்து (பிச்சை யெடுத்து) உண்ணும், Unnum - ஜீவித்த முண்டியான், Mundiyan - மொட்டையாண்டியான ருத்ரனுடைய சாபம், Saapam - ப்ரஹ்ம ஹத்தி சாபத்தை தீர்த்த, Theertha - போக்கின ஒருவன், Oruvan - அத்விதீயனான் எம்பெருமானுடைய ஊர், Oor - திருப்பதிகளாய் உலகம் ஏந்தும், Ulagam Aendhum - உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டன வாயு முள்ள கண்டியூர், Kandiyur - திருக்கண்டியூரென்ன அரங்கம், Arangam - திருவரங்கமென்ன மெய்யம், Meyyam - திருமெய்யமென்ன கச்சி, Kacchi - திருக்கச்சியென்ன பேர், Per - திருப்பேர்நகரென்ன மல்லை, Mallai - திருக் கடன்மல்லை யென்ன என்று, Endru - ஆகிய இத் திருப்பதிகளைப் பேசிக் கொண்டு மண்டினார், Mandinaar - அவகாஹிக்குமவர்கள் உய்யல் அல்லால், Uyyaal Allaal - உஜ்ஜீவிக்கலாமத்தனை யொழிய மற்றையார்க்கு, Mattraiyaarkku - அல்லாதவர்களுக்கு உய்யல் ஆமே, Uyyaal Aame - உஜ்ஜீவிக்க வழியுண்டோ? (இல்லை) |