திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2048 | திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகின்ற பக்தர்களும் நல் வீடு பெறுகிறார்கள்; அப்பெருமானை ஏசுகின்ற சிசுபாலாதிகளும் நல் வீடு பெறுகிறார்களென்று சாஸ்திரங்களினால் தெரிகின்றது; இவ்விரு வகுப்பிலும் எனக்கு அந்வயமில்லை; எம்பெருமானுடைய பெருமையை அறிவிலியான நான் என்ன பேசப் போகிறேன்; என்னால் பேச முடியுமோ? முடியாததால் * பேருளான் பெருமை பேசிப் பிறவி நீத்தாருடைய கோஷ்டியிலே அந்வியக்கப் பெற்றிலேன் நான். இனி, சிசுபாலாதிகளைப்போலே ஏசி உய்ந்து போகலாமோ வென்னில், ஏசிப் பெறும் மோக்ஷம் எனக்கு வேண்டா; மோக்ஷம் போகாமல் நரகம் போனாலும் போகிறேன், எம்பெருமானை ஏசாதிருந்தேனாகில் போதும்; சிசுபாலாதிகளின் செயலும் எனக்கு வேண்டா; அவர்கள் பெற்ற பேறும் எனக்கு வேண்டா; ஆக இரண்டு வகையாலும் மோக்ஷம் பெறுவதற்கு ப்ராப்தியில்லை யாயிற்று; ஆயினும், மோக்ஷம் பெற வேணுமென்கிற ஆசையோ அபாரமாகவுள்ளது; அவனுடைய வடிவழகு என்னைத் துவக்குகின்றது, என் செய்வே னென்கிறார். 17 | பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி
ஏசினர் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தேற்கு
ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே | பதவுரை Show / Hideபேர் உளான், Peer Ulaan - திருப்பேர் நகரில் எழுந்தருளி பெருமை, Perumai - பெருமையை பேசினார், Pesinaar - பேசினவர்கள் உய்ந்து போனார், Uyinthu Poonaar - உஜ்ஜீவித்தார்கள். என்பது, Enbathu - என்று சொல்வது இ உலகின் வண்ணம், I Ulagin Vannam - சாஸ்த்ர மர்யாதையாகும்; பேதையேன், Pethaeyen - அறிவு கேடனான நானோவென் பேசியேன், Pesiyen - (அவன் பெருமையைப் பேச வல்லவனொ!) ஏச மாட்டேன், Eesa Maatten - (சிசுபாலாதிகளைப் போலே) ஏசவும் மாட்டேன்; பிறவி நீத்தார், Piravi Neeththaar - ஸம்ஸாரத்தைக் கடந்து முக்தரானார்கள்; பேசி ஏசினார், Pesiy Eesinaar - அப் பெருமையைப் பேசிப் பரிஹஸித்த சிசுபாலாதிகளும் பிறவி நீத்தற்கு, Piravi Neeththarku - இந்த ஸம்ஸாரத்தை விட்டு நீங்குதற்கு அலை கடல் வண்ணர் பால், Alai Kadal Vannaar Paal - அலை யெறிகின்ற கடல் போன்ற நிறத்தனான எம்பெருமான் விஷயத்திலே ஆசையோ பெரிது, Aasaiyo Peridhu - ஆதரமோ அதிகமாயிருக்கின்றது; கொள்க, Kolga - இதனை உணர்க. |