திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2048 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2048திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகின்ற பக்தர்களும் நல் வீடு பெறுகிறார்கள்; அப்பெருமானை ஏசுகின்ற சிசுபாலாதிகளும் நல் வீடு பெறுகிறார்களென்று சாஸ்திரங்களினால் தெரிகின்றது; இவ்விரு வகுப்பிலும் எனக்கு அந்வயமில்லை; எம்பெருமானுடைய பெருமையை அறிவிலியான நான் என்ன பேசப் போகிறேன்; என்னால் பேச முடியுமோ? முடியாததால் * பேருளான் பெருமை பேசிப் பிறவி நீத்தாருடைய கோஷ்டியிலே அந்வியக்கப் பெற்றிலேன் நான். இனி, சிசுபாலாதிகளைப்போலே ஏசி உய்ந்து போகலாமோ வென்னில், ஏசிப் பெறும் மோக்ஷம் எனக்கு வேண்டா; மோக்ஷம் போகாமல் நரகம் போனாலும் போகிறேன், எம்பெருமானை ஏசாதிருந்தேனாகில் போதும்; சிசுபாலாதிகளின் செயலும் எனக்கு வேண்டா; அவர்கள் பெற்ற பேறும் எனக்கு வேண்டா; ஆக இரண்டு வகையாலும் மோக்ஷம் பெறுவதற்கு ப்ராப்தியில்லை யாயிற்று; ஆயினும், மோக்ஷம் பெற வேணுமென்கிற ஆசையோ அபாரமாகவுள்ளது; அவனுடைய வடிவழகு என்னைத் துவக்குகின்றது, என் செய்வே னென்கிறார். 17
பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி ஏசினர் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம் பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தேற்கு ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே
பதவுரை Show / Hide
பேர் உளான், Peer Ulaan - திருப்பேர் நகரில் எழுந்தருளி
பெருமை, Perumai - பெருமையை
பேசினார், Pesinaar - பேசினவர்கள்
உய்ந்து போனார், Uyinthu Poonaar - உஜ்ஜீவித்தார்கள்.
என்பது, Enbathu - என்று சொல்வது
இ உலகின் வண்ணம், I Ulagin Vannam - சாஸ்த்ர மர்யாதையாகும்;
பேதையேன், Pethaeyen - அறிவு கேடனான நானோவென்
பேசியேன், Pesiyen - (அவன் பெருமையைப் பேச வல்லவனொ!)
ஏச மாட்டேன், Eesa Maatten - (சிசுபாலாதிகளைப் போலே) ஏசவும் மாட்டேன்;
பிறவி நீத்தார், Piravi Neeththaar - ஸம்ஸாரத்தைக் கடந்து முக்தரானார்கள்;
பேசி ஏசினார், Pesiy Eesinaar - அப் பெருமையைப் பேசிப் பரிஹஸித்த சிசுபாலாதிகளும்
பிறவி நீத்தற்கு, Piravi Neeththarku - இந்த ஸம்ஸாரத்தை விட்டு நீங்குதற்கு
அலை கடல் வண்ணர் பால், Alai Kadal Vannaar Paal - அலை யெறிகின்ற கடல் போன்ற நிறத்தனான எம்பெருமான் விஷயத்திலே
ஆசையோ பெரிது, Aasaiyo Peridhu - ஆதரமோ அதிகமாயிருக்கின்றது;
கொள்க, Kolga - இதனை உணர்க.