திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2045 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2045திருக்குறுந்தாண்டகம் || கீழ்ப் பாட்டில் “கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணினை களிக்கு மாறே“ என்று ஆனந்த பரவசராய்ப் பேசினவர், ஐயோ! பழுதே பல பகலும் போயினவே யென்று கழிவிரக்கங்கொண்டு, கீழ் நாள்களெல்லாம் வாளாவிருந்தொழிந்து பாவியானேனெயென்று முடி மேல் மோதிக் கொள்ளுகிறார். 14
காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும் பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன் தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே
பதவுரை Show / Hide
காவியை, Kaaviyai - கரு நெய்தல் மலரை
வென்ற, Vendra - தோற்பித்த
கண்ணார், Kannaar - கண்களை யுடையரான மாதர்களினது
கலவியே, Kalaviye - கலவியையே
கருதி, Karuthi - நினைத்துக் கொண்டு
நாளும், Naalum - அநாதி காலமாக
பாவியேன் ஆக எண்ணி, Paaviyen Aaga Enni - மஹா பாபியாகும்படி மநோ ரதித்து
அதனுள்ளே, Adhanulle - அந்தப் பாவப் படு குழியிலேயே
பழுத்தொழிந்தேன், Pazhuthozhindhen - பரி பக்குவனாய் விட்டேன;
தூவி சேர், Thuvi Ser - (அழகிய) சிறகையுடைய
அன்னம் மன்னும், Annam Mannum - அன்னப் பறவைகள் பொருந்தி வாழ்கிற
சூழ் புனல், Sozh Punai - சுற்றிலும் ஜல ஸம்ருத்தியை யுடைத்தான
குடந்தை யானை, Kudandai Yaanai - திருக்குடந்தைக்குத் தலைவனான எம்பெருமானை
பாவியேன், Paaviyen - பாவியான நான்
பாவியாது, Paaviyaadhu - சிந்தியாமல்
பாவியேன் ஆயினேன், Paaviyen Aayinenn - (மேலும்) மஹா பாபியானேன்.