திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2037 | திருக்குறுந்தாண்டகம் || பகவத் விஷயத்தை அநுபவிக்கப் புகுமவர்கள் வாயாலே ஏதோ சில பாசுரங்களைச் சொல்லிப் புகழ்கின்றார்களே, என்ன பாசுரஞ் சொல்லிப் புகழ்வது! பெரு வெள்ளத்திலே புகுந்து முழுகுமவர்கள் குமிழ் நீருண்டு கிடக்குமத்தனை போல, பகவத் விஷய ஸாகரத்திலும் அழுந்திக் கிடக்கலாமே யொழிய ஏதேனும் பாசுரமிட்டுச் சொல்லப் போமோ? என்கிறார். 6 | மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட,
கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப்
பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே? | பதவுரை Show / Hideமூவரில், Moovariyil - த்ரி மூர்த்திகளுள் முதல்வன் ஆய ஒருவனை, Muthalvan Aaya Oruvanai - முதற் கடவுளாகிய அத்விதீயனும் உலகம் கொண்ட கோவினை, Ulagam Konda Kovinaik - (மாவலியிடத்தில்) உலகங்களை இரந்து பெற்ற ஸ்வாமியும் குடந்தை மேய, Kudandhai Maeya - திருக்குடந்தையில் நித்ய வாஸம் செய்பவனும் குரு மணி திரளை, Guru Mani Thiralai - சிறந்த நீல ரத்னக் குவியல் போன்றவனும் இன்பம் பாவினை, Inbam Paavinaik - இன்பந்தரும் பாட்டுக்களைப் போலே சுவை மிக்கவனும் பச்சை தேனை, Pachchai Thenai - பசுந்தேன் போலே நாவுக்கு இனியனும் பைம் பொன்னை, Paim Ponnai - பசும் பொன் போல் விரும்பத் தக்க கவனும் அமரர் சென்னி பூவினை, Amarar Senni Poovinai - நித்ய ஸூரிகளுக்குத் தலை மேலணியும் பூவாயிருப்பவனுமான பெருமானை புகழும், Pugazhume - புகழ்கின்ற தொண்டர் தாம், Thondar Thaam - தொண்டர்கள் என் சொல்லி புகழ்வர், En Solli Pugazhvar - எதைச் சொல்லிப் புகழ்வார்கள்? |