திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1991 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1991பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சாலே தரித்தும்-இதுவே யாத்ரையாக யுழலு கிறவர்கள் ஸ்ரீ பரம பதத்தைப் பெற்று அனுபவிப்பார்கள்) 10
கொலை கெழு செம்முகத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல் ஒழி கெழு பாடல் பாடி யுழல் கின்ற தொண்டரவர் ஆள்வர் உம்பர் உலகே –11-4-10
பதவுரை Show / Hide
கொலை கெழு, Kolai Kezhu - கொலை செய்யுமியல்வு விளக்கப் பெற்ற
செம் முகத்த, Sem Mugath - சிவந்த முகத்தையுடையத்தாயக் கொண்டுவந்த
களிறு ஒன்று, Kaliru Ondru - (குவலயாபீடமென்னும்) ஒரு யானையை
கொன்று, Kondru - கொன்றொழித்தவனாயும்
கொடியோன், Kodiyon - கொடியவனான இராவணனுடைய
பொடி ஆ, Podi Aa - பொடியாகும்படி
சிலை கெழு செம் சரங்கள் செல உய்த்த, Silai Kezhu Sem Sarangal Sel Uytha - வில்லிலுள்ள நெருப்புப் போன்ற அம்புகளைப் பிரயோகித்தவனாயுமுள்ள
நங்கள் திருமாலை, Nangal Thirumalai - எம்பெருமானைக் குறித்து,
வேலை புடை சூழ, Velai Pudai Soozha - கடலாலே சுற்றுஞ் சூழப்பட்டதாய்
கலி கெழு மாடம் வீதி, Kali Kezhu Maadam Veethi - வலிமைமிக்க மாடவீதிகளை யுடையதாய்
வயல், Vayal - கழனிகளையுடைத்தான
மங்கை, Mangai - திருமங்கைநாட்டிலே
மன்னு, Mannu - பொருந்திவாழ்கிற
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
பனுவல், Panoval - ஸ்ரீஸூக்தியாய்
ஒலி கெழு, Oli Kezhu - சொற்கள் சிறந்த
பாடி, Paadi - வாயாரப்பாடி
உழல்கின்ற, Uzhalginra - இதுவே போதுபோக்காய்த் திரிகின்ற
தொண்டர் அவர், Thondar Avar - பாகவதர்கள்
உம்பர் உலகு, Umbar Ulagu - பரமபத்த்தை
ஆள்வர் –, Aalvar - ஆளப்பெறுவர்கள்