திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1960 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இட்ட திருத் துழாயில் பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் – மிக்க சீர் தொண்டர் இட்ட -என்பான் என் என்னில் –அங்குத்தைக்கு பரிவர் உண்டு -என்று அறிந்தால் இறே இவளுக்கு கண் உறங்குவதும்-பழைய நிறம் வருவதுவும் – அநந்ய பிரயோஜாரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்குத்தைக்கு பரியா நின்றார்கள் என்று கேட்ட வாறே இனி நமக்கு ஒரு குறை இல்லை என்று கண் உறங்கா நிற்கும்-நிறமும் பழைய படியேயாம்) 9 | கெண்டை ஒண் கண்ணும் துயிலும் எந்நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்
தொண்டரிட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதும் ஆகிலே –11-1-9 | பதவுரை Show / Hideமிக்க சீர் தொண்டர், Mikka Seer Thondar - அநந்யப்ரயோஜநரான ஸ்ரீ வைஷ்ணவாக்ள் இட்ட, Itta - ஸமர்ப்பித்த பூ துளவின், Poo Thulavin - திருத்துழாய் மலரின் வாசம், Vaasam - பரிமளத்தை வண்டு, Vandu - வண்டானது கெண்டை, Kendai - கெண்டை மீன்போன்று அழகிய ஒண் கணும், On Kanum - (எனது) கண்களும் துயிலும், Thuyilum - உறக்கங்கொள்ளும் என்நிறம், Enniram - எனது மேனி நிறமும் கோண்டு வந்து, Kondhu Vandu - முகந்துகொண்டுவந்து பண்டு பண்டு போல் ஓக்கும், Pandhu Pandhu Pol Okkum - முன்னைய வண்ணமாகும் ஊதும் ஆகில், Oodhum Aakil - (என்னருகில்) ஊதுமானால் |