திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1958 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1958பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வைத்த கண் மாறாதே கண்டு கொண்டே இருக்க வேண்டும்படியான ஆகர்ஷகமான வடிவை உடையவர் – ஒரு மேருவை இனிய மேகம் படிந்தால் போலே ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே வர – சிதிலை யாகாதே நின்று-நான் கண்டத்துக்கு தண்டமோ –காமன் ஆனவன் தன்னுடைய புஷ்ப பாணங்களாலே-தோல் புரையே அன்றியே மர்மத்திலே எய்கிற இது) 7
பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர மேவி நின்று நான் கண்ட தண்டமோ வீவில் ஐங்ணை வில்லி யம்பு கோத்து ஆவியே இலக்காக எய்வதே –11-1-7
பதவுரை Show / Hide
ஐங்கணை வில்லி, Aingadai Villi - மன்மதனானவன்
வீவு இல், Veivu Il - இறைப்பொழுதும் ஓய்வில்லாமல்
அம்பு கோத்து, Ambu Koththu - பாணங்களைத் தொடுத்து
ஆவியே இலக்கு ஆக எய்வது, Aaviye Ilakku Aaga Eyvathu - என் உயிரையே லஷயமாகக் கொண்டு பிரயோகிப்பதானது
பூவை வண் ணனார், Poovai Vannanaar - காயம்பூவண்ணரான பெருமாள்
புள்ளின் மேல் வர, Pullin Mel Vara - பெரிய திருவடியின் மீது எழுந்தருள
நான்மேவி நின்று, Nanmevi Nindru - நான் விரும்பி நின்று கொண்டு
கண்ட தண்டமோ, Kanda Thandamo - கண்டதற்கான தண்டனையோ