திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1938 | பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவளுடைய –முன்னே உன்னுடைய வடிவை ஒரு கால் காட்டி போகிறிலை – தன்னடையே உடைந்து போகிற இத்தை தடியை இட்டுத் தகர்க்க வேணுமோ) 7 | ஆழி யம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடலுலக முன்னாண்ட
பாழி யம் தோள் ஆயிரம் வீழப் படை மழுப் பற்றிய வலியோ
மாழை மென்னோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடுங்கடல் வண்ணா –10-9-7 | பதவுரை Show / Hideமுன், Mun - முற்காலத்து, (- (நெடுங்கடல்வண்ணா எந்தாய்!)) திண், Thin - வலிமைபொருந்திய ஆழி, Aazhi - உருளையோடு கூடின அம் தேர், Am Ther - அழகிய தேரையுடையரான அரசர், Arasar - ராஜாக்கள் வந்து இறைஞ்ச, Vandhu Irajinja - வந்து வணங்கும்படியாக அலை கடல் உலகம், Alai Kadal Ulagam - அலைகடல் சூழ்ந்த உலகங்களை ஆண்ட, Aanda - ஆட்சிபுரிந்த ஓர் ஆயிரம் பாழி அம் தோள் விழ, Oru Aayiram Pazhi Am Thol Vizh - (கார்த்தவீரியனுடைய) வலிமிக்க ஓராயிரந் தோள்கள் இற்று விழும்படியாக வடை மழு பற்றிய வலியோ, Vadai Mazhu Patriya Valiyo - கோடாலிப்படையை எந்திய மிடுக்கை நினைத்தோ மாழை மெல்நோக்கி, Mazhai Melnookki - மானினுடைய அழகிய நோக்குப் போன்ற நோக்கையுடையளான பெண்பிள்ளையினுடைய மணி நிறம் கொண்டு, Mani Niram Kondu - அழகிய மேனி நிறத்தைக் கொள்ளை கொண்டது மன்றி முன்னே வந்து நின்று போகாய், Munnai Vandu Nindru Pogai - உருவெளிப்பாட்டாலே இவள் கண்ணெதிரே தோற்றி நின்று புறம்பு போகிறாயில்லை, கோழி வெண்முட்டைக்கு, Koli Venmuttaikku - (தன்டையே உடைந்து போக்க்கூடியதான) கோழி முட்டையை உடைப்பதற்கு குறு தடி, Kuru Tadi - சிறிய தடிதானும் ஏன் செய்வது, Ean Seivathu - ஏதுக்கு? |