திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1922 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1922பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காலத்தைத் தப்பினான் ஆயிற்று -ஒப்பித்து வர வேண்டுகையாலே – இவர்களுக்கு உடலாக ஒப்பிக்கிறத்தோடு-இவர்களோடு சம்ஸ்லேஷிக்கிறதோடு வாசி என் என்றாயிற்று -அவன் படி – இருந்தபடியே உகக்கிற எங்களுக்கு ஒப்பிக்க வேணுமோ – கிட்டி வரச் செய்தேயும் காலத்தைத் தப்பி வருகையாலே ஓர் அடியிலே பத்தடி இட்டான் ஆயிற்று –சாபராதன் ஆகையாலே கிட்டி வர மாட்டுகிறிலன்- ஆற்றாமையாலே புறம்பு போக மாட்டுகிறிலன்–ஒப்பித்துக் கொடு வர வேணுமோ – காலத்தைத் தப்பி வர வேணுமோ – சாபராதனானால் மேல் விழ வன்றோ வடுப்பது) 1
காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத் தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து போது மறுத்துப் புறமே வந்து நின்றீர் ஏதுக்கு யிதுவென் யிதுவென் யிதுவென்னொ –10-8-1
பதவுரை Show / Hide
காதில், Kaadhil - காதிலே (- (பெரியவரே) (இது ஏன்? இது ஏன்? இது ஏன்?))
கடிப்பு, Kadippu - குண்டலத்தை
இட்டு, Ittu - அணிந்துகொண்டும்
கலிங்கம் உடுத்து, Kalingam Uduthu - திருப்பரியட்டத்தைச் சாத்திக் கொண்டும்
தாது நல்ல த ண் அம் துழாய், Thaadu Nalla Tha N Am Thuzhai - தாதுகளையுடைத்தாய நல்ல குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையை
அணிந்து கொடு, Aninthu Kodu - அணிந்து கொண்டும்
போது மறித்து வந்து, Podhu Marithu Vandu - காலதாமதமாக வந்து
புறமே, Purame - கதவின் புறமாக
எதுக்கு நின்றீர், Ethukku Nindreer - ஏன் நிற்கின்றீர்