திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1899 | பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த பிரளய காலத்து அவை தன் வயிற்றில் புகாத போது உண்டான தளர்த்தி எல்லாம் இவ் வெண்ணெய் பெறாத போது உடையனாய்க் கொண்டு அமுது செய்தான்) 2 | குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் அதுவன்றியும் முன்
நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி
அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே –10-6-2 | பதவுரை Show / Hideஒன்று குன்று, Ondru Kuntru - (மந்தரமென்கிற) ஒரு மலையை (- (அது அன்றியும்) (இன்று ஆய்ச்சியால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்.)) மத்து ஆ, Maththu Aa - மத்தாகக் கொண்டு அரவம், Aravam - (வாஸுகியென்னும்) நாகத்தை அளவி, Alavi - (கடை கயிறாகச்) சுற்றி குரை மா கடலை, Kurai Maa Kadalai - ஒலிக்கின்ற பெருங்கடலை கடைந்திட்டு, Kadaindittu - கடைந்து ஒருகால், Orukaal - மற்றொரு காலத்தில், உண்டை கொண்டு, Undai Kondu - (வில்லிலுள்ள) உண்டைகளைக் கொண்டு வன் கூன், Van Koon - வலிதான கூனை ஓட்டி நின்று, Otti Nindru - போக்கி நிமிர, Nimira - (கூன்) நிமிரும்படி நினைந்த, Ninaintha - திருவுள்ளம்பற்றின பெருமான், Perumaan - ஸர்வேச்வரனாய், முன் அன்று, Mun Andru - முன்பொருகாலத்தில், நன்று உண்ட தொல் சீர், Nandru Unda Thol Seer - நன்றாகத் தன்னுட்கொள்ளப்பட்ட சிறப்பையுடைய மகரம் கடல் ஏழ், Makarama Kadal Ezh - மகரங்கள் திளைக்கின்ற ஸப்த ஸாகரங்களும் மலை ஏழ், Malai Ezh - ஸப்தகுலாசங்களும் உலகு ஏழ், Ulaku Ezh - ஸப்தலோகங்களும் ஒழியாமை, Ozhiyamai - ஒன்றுதப்பாதபடி நம்பி, Nambi - (எல்லாவற்றையும் விரும்பி) உண்டவன் காண்மின், Undavan Kaanmin - திருவயிற்றிற் கொண்டவனன்றோ |