திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1879 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1879பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாய் முலை சுரந்து பார்த்து இருக்கும் அன்று வருகை அன்றிக்கே நான் அழைத்தும் வரக் காணாது இருந்தேன் – எங்கே புக்கிருந்து உன் பக்கல் நிரபேஷரானார் உடன் – சாபேஷையாய் நான் பார்த்து இருக்க – என்ன விளையாட்டு விளையாடுகிறது) 2
வங்கமறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கு நம்பி செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன் எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே –10-4-2
பதவுரை Show / Hide
வங்கம் மறி கடல் வண்ணா, Vangam Mari Kadal Vanna - அலைகள் மடிந்து மடிந்து எறிகிற கடலின் நிறம் போன்ற நிறமுடையவனே!
மா முகிலே ஒக்கும் நம்பீ, Maa Mukile Okkum Nambi - காளமேகத்தை யொத்திருக்கின்ற பிரானே!
நெடிய செம்கண் திருவே, Nedhiya Semkan Thiruve - நீண்ட செந்தாமரைக் கண்களையுடைய ஸ்ரீமானே!
செம் கமலம் புரை வாயா, Sem Kamalam Purai Vayaa - செந்தாமரைப் பூப்போன்ற திருமுகத்தை யுடையவனே!
கொங்கை காந்திட, Kongai Kanthida - என் முலைகளிலே பரல்காக்க
உன்னை கூவியும், Unnai Kooviyum - உன்னையழைத்தும்
காணாது இருந்தேன், Kaanadhu Irundhen - நீவரக்காண்கின்றிலேன்,
ஆயர்களோடும், Aayargalodum - இடைப்பிள்ளைகளோடே
எங்கு இருந்து, Engu Irundhu - எவ்விடத்திலிருந்துகொண்டு
என்விளையாடுகின்றாய், Envilaiyaadugindrai - என்ன விளையாட்டு விளையாடுகின்றாய்?