திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1879 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாய் முலை சுரந்து பார்த்து இருக்கும் அன்று வருகை அன்றிக்கே நான் அழைத்தும் வரக் காணாது இருந்தேன் – எங்கே புக்கிருந்து உன் பக்கல் நிரபேஷரானார் உடன் – சாபேஷையாய் நான் பார்த்து இருக்க – என்ன விளையாட்டு விளையாடுகிறது) 2 | வங்கமறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கு நம்பி
செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன்
எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே –10-4-2 | பதவுரை Show / Hideவங்கம் மறி கடல் வண்ணா, Vangam Mari Kadal Vanna - அலைகள் மடிந்து மடிந்து எறிகிற கடலின் நிறம் போன்ற நிறமுடையவனே! மா முகிலே ஒக்கும் நம்பீ, Maa Mukile Okkum Nambi - காளமேகத்தை யொத்திருக்கின்ற பிரானே! நெடிய செம்கண் திருவே, Nedhiya Semkan Thiruve - நீண்ட செந்தாமரைக் கண்களையுடைய ஸ்ரீமானே! செம் கமலம் புரை வாயா, Sem Kamalam Purai Vayaa - செந்தாமரைப் பூப்போன்ற திருமுகத்தை யுடையவனே! கொங்கை காந்திட, Kongai Kanthida - என் முலைகளிலே பரல்காக்க உன்னை கூவியும், Unnai Kooviyum - உன்னையழைத்தும் காணாது இருந்தேன், Kaanadhu Irundhen - நீவரக்காண்கின்றிலேன், ஆயர்களோடும், Aayargalodum - இடைப்பிள்ளைகளோடே எங்கு இருந்து, Engu Irundhu - எவ்விடத்திலிருந்துகொண்டு என்விளையாடுகின்றாய், Envilaiyaadugindrai - என்ன விளையாட்டு விளையாடுகின்றாய்? |