திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1878 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற நம்பி – ஈஸ்வரனுக்கு இது அலாப்ய லாபமாய் இருக்கிற படி – இவர் பிள்ளையாகப் பெற்ற ஏற்றம் உடையவனே – பிதரம் ரோசயா மாச -என்று அவனை ஆசைப் பட்டு இறே பிறந்தது தனக்கு கிடையாதது பெறுகை இறே -அலாப்ய லாபம் – பிறக்கிற சம்சாரிக்கு பிறவாமை ஏற்றமோபாதி இறே அவனுக்குப் பிறக்கப் பெறுகையும் – தேவர்கள் தாங்கள் புஜிக்கும் அம்ருதத்தில் வாசி – ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற என்று தொடங்கி இவன் ஆதரித்து முலை உண்கைக்காக ஸ்தோத்ரம் பண்ணுகிறாள்) 1 | சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே
வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-1 | பதவுரை Show / Hideநந்தன், Nandhan - நந்தகோபர் பெற்ப்பெற்ற, Perppetra - பிள்ளையாகப் பெறும்படி வாய்ந்த நம்பீ, Nambi - ஸ்வாமியே! நான் உகந்து உண்ணும் அமுதே, Naan Uganthu Unnum Amudhe - நான் பரிவுடனே புஜிக்கின்ற அமுதமாயிருப்பவனே! எந்தை பெருமானே, Endai Perumane - என்குல நாதனான கண்ணபிரானே! சந்தம் மலர் குழல், Chandham Malar Kuzhal - செவ்விப் பூக்களை யணிந்த திருக்குழற்கற்றையானது தாழ, Thaa - அலைய தான் தனியே உகந்து ஓடி வந்து, Thaan Thaniye Uganthu Oodi Vandu - நீ (பலராமனைவிட்டுத்) தனியே மகிழ்ச்சியுடன் (என் பக்கல்) ஓடிவந்து என் முலைத்தடம் தன்னை வாங்கி, En Mulaittadam Thannai Vaangi - எனது முலைகளைக்கையிற்பிடித்து நின் வாயில் மடுத்து, Nin Vayil Maduthu - உனது வாயிலே நிறைத்துக் கொண்டு உண்ணாய், Unnai - உண்ணவேணும், என் அம்மம், En Ammam - என்னுடைய முலைப்பாலாகிற சேமம், Semam - க்ஷேமத்தளிகையை உண்ணாய், Unnai - உண்ணவேணும் |