திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1869 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1869பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எங்களுக்கு வேறு சிலர் ரஷகர் உண்டு என்று நினைத்து நலிய வேண்டியது இல்லை) 2
எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்த்ரஜித் அழிந்தான் நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே கும்பகர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே –10-3-2
பதவுரை Show / Hide
இந்திரசித்து, Indirachithu - இந்த்ரஜித்தானவன் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.))
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அரற்றாதே, Embirane Ennai Aalvaai Endru Endru Aratradhe - பகவந் நாமங்களையே சொல்லிக்கோஷம் போடாமல்
அம்பின் வாய் பட்டு, Ambin Vaai Pattu - பாணங்களுக்கு இரையாகி
ஆற்ற கில்லாது, Aattra Killaadhu - தரித்திருக்க மாட்டாமல்
அழிந்தான், Azhindhaan - மாண்டுபோனான்
நம்பி அனுமா!, Nambi Anumaa - சுக்கிரீவா! அங்கதனே! நளனே!
கும்பகரணன், Kumbakaranan - கும்பகர்ணனானவன்
பட்டுப் போனான், Pattup Ponaan - முடிந்துபோனான்