திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1865 | பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டியை சிறை வைத்த ராவணன் உடைய தப்ப நினைத்த நெஞ்சில் –உறைக்க எய்ய வல்லனாய் அழகிய வடிவையும் திண்ணிய தோளையும் உடைய ஸ்ரீ பெருமாளுக்கு அஞ்சினோம்) 8 | மனம் கொண்டேறும் மண்டோதரி முதலா அங்கயல் கண்ணினார்கள் இருப்பத்
தனம் கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று
புனம் கொள் மென் மயிலைச் சிறை வைத்த புன்மையாளன் நெஞ்சில் புக வெய்த
அனங்கன் அன்ன திண தோள் எம்மிராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-8 | பதவுரை Show / Hideமனம் கொண்டு ஏறும், Manam Kondu Aerum - நெஞ்சைக் கவரும்படியான அழகுடையவர்களான (- (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ)) மண்டோதரி முதலா, Mandothari Muthala - மந்தோதரி முதலான அம் கயல் கண்ணினார்கள், Am Kayal Kanninargal - அழகிய மீன்போன்ற கண்களையுடையரான மனைவியர் பலர் இருப்பு, Iruppu - குறையற்றிருக்கச் செய்தேயும், தனம் கொள், Thanam Kol - தனக்குச் செல்வமாயிருக்கின்ற மெல் முலை, Mel Mulai - அவர்களுடைய அழகிய முலைகளிலே நோக்கம் ஒழிந்து, Nokkam Ozhinthu - கண் செலுத்தாமல் சில தாபதர் தஞ்சமே என்று, Sila Thapathar Thanjame Endru - (இப்பிராட்டிக்காகப் பரிந்து வரக்கூடியவர்கள்) சில காட்டாள்கள்தானே அவர்கள்சரக்கோ, என்று அவலீலையாக நினைத்துக் கொண்டு புனம் கொள் மென் மயிலை சிறை வைத்த, Punam Kol Men Mayilai Sirai Vaiththa - காட்டில் தன்னிஷ்டப்படி திரிகின்ற அழகிய மயில் போன்றவளான பிராட்டியைச் சிறையிலே வைத்தவனாய் புன்மை யாளன், Punmai Yalan - நீசனான இராவணனுடைய நெஞ்சில், Nenjil - மருமத்திலே புக, Puga - உறைக்க எய்த, Eitha - அம்பு செலுத்தியவரும் அனங்கள் அன்ன, Anangal Anna - மன்மதனைப் போன்ற அழகுடையவரும் திண் தோள், Thin Thol - வலிமைமிக்க திருத்தோள்களையுடையவருமான எம் இராமற்கு, Em Iramarukku - எங்களிராமவிரானுக்கு |