திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1857 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவை சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு விச்சேதம் இல்லை –நச புனராவர்த்ததே ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-நித்ய அனுபவம் பண்ணலாம் தேசத்தை ஆளுவார்கள்) 10 | பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக்
கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த
சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே –10-1-10 | பதவுரை Show / Hideபெற்றம் ஆளியை, Petram Aalaiya - பசுக்களை ஆளப்பிறந்தவனும் பேரில், Peril - திருப்பேர் நகரில் மணளனை, Manalanai - மணவாளப்பிள்ளையாக ;ஸேவை ஸாதிப்பவனுமான பெருமான் விஷயமாக, நூல் கற்ற கலிகன்றி உரைசெய்த, Nool Katra Kalikanri Uraichaidha - நூல்களைப் பயின்ற திருமங்கையாழ்வார் அருளிச்செய்த சொல் திறம் இவை, Sol Thiram Ivai - இந்த சப்தராசியை சொல்லிய தொண்டர் கட்கு, Solliya Thondar Kadku - ஓதுகின்ற பாகவதர்களுக்கு அற்றம் இல்லை, Attram Illai - (கைங்கரியத்திற்கு) இடையூறு (ஒருநாளும்) இல்லையாம். அவர்க்கு அண்டம் ஆட்சி, Avarkku Andam Aatchi - அவர்களுக்குப் பரமபதம் ஆளவுரியதாம். |