திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1814 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1814பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீர்க் களிப்பை அறுக்கைக்கு ஈடாக உஷ்ண கிரணனான ஆதித்யனாய் அவனால் வந்த தாபத்தை ஆற்றுகைக்கு ஈடான தண்ணளியை உடைத்தான சந்த்ரனாய் – மேக சஞ்சாரத்தை யுடைத்தான ஆகாசமாய் நிற்கிற ஆச்சர்ய பூதரானவர் –கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை) 7
நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா பேயர் தாம் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல் தீயுலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல் வானாகி நின்ற மாயனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-7
பதவுரை Show / Hide
சோய் எலாம், Soy Elam - எல்லா நோய்களையும் (- (நெஞ்சே!) (வல்லவாழ் *** மருவு))
பெய்த்து, Peytthu - இட்டுப்பண்ணின
ஓர் ஆக்கையை, Or Akkaiyai - சரீரத்தை
மெய் என கொண்டு, Mei En Kondu - மெய்யென்றே எண்ணிக்கொண்டு
பேயர்தாம், Peyartham - அவிவேகிகள்
வாளா, Vaalai - வீணாக
பேசும் அப்பேச்சை, Pesum Appechchai - பேசுகிற பேச்சுக்களை
பிழை என நீ கருதினாய் எல், Pizhai En Ni Karuthinay El - பிசகென்று நீ நினைத்தாயாகில்,
தீ உலாம் வெம் கதிர், Thi Ulam Vem Kathir - ஜ்வாலையோடு கூடின உஷ்ண கிரணனான ஸூரியனாகவும்
திங்கள் ஆய், Thingal Ay - சந்திரனாகவும்
மங்குல் வான் ஆகி நின்ற, Mangul Vaan Aagi Nindra - மேக ஸஞ்சாரத்தையுடைய ஆகாசமாகவும் பரம்பி நிற்கின்ற
மாயனார், Maayanar - ஆச்சர்யபூதனான பெருமானுடைய