திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1800 | பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மஹாஸ் வராஹஸ் ஸ்புட பத்ம லோசன -என்கிறபடியே காணவே தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிர்ந்து முகில் போலே இருக்கிற வடிவை உடையனாய் இருகிறவன் – அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதித்து போகாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்) 3 | வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்
கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர்
ஏழைச் செங்காலின் துணை நாரைக்கு இரை தேடிக்
கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே –9-6-3 | பதவுரை Show / Hideதொண்டீர்காள், Thondeerkaal - பாகஸதர்களே! வாழ கண்டோம், Vaazha Kandom - உஜ்ஜீவிக்கும் வகையறிந்தோம் ஏழை செம் கால், Ezhaik Sem Kaal - மிருதுவாய்ச் சிவந்த கால்களையுடைய இன் துணை நாரைக்கு, In Thunai Naraikku - இனிய துணையாகிய நாரைச்சேவனுக்கு இரை தேடி, Irai Thedi - உணவு தேடிக்கொண்டு கூழை பார்வை, Koozhai Paarvai - க்ருத்ரிமமான பார்வையை கார் வயல் மேயும், Kaar Vayal Meyum - கருவடைந்த வயல்களிலே மேயப்பெற்றதும் கேழல், Kezhal - வராஹாவதாரம் செய்தருளினவராய் செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணராய் மா முகில் வண்ணர், Maa Mukil Vannaar - காளமேகம் போன்ற நிறத்தையுடையவரான பெருமாள் மருவும் ஊர், Maruvum Oor - பொருந்திவாழும் திவ்ய தேசமாயிருப்பதுமான குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியை வந்து காண்மின், Vandhu Kaanmin - வந்து ஸேவியுங்கள் |