திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1800 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1800பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மஹாஸ் வராஹஸ் ஸ்புட பத்ம லோசன -என்கிறபடியே காணவே தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிர்ந்து முகில் போலே இருக்கிற வடிவை உடையனாய் இருகிறவன் – அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதித்து போகாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்) 3
வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள் கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர் ஏழைச் செங்காலின் துணை நாரைக்கு இரை தேடிக் கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே –9-6-3
பதவுரை Show / Hide
தொண்டீர்காள், Thondeerkaal - பாகஸதர்களே!
வாழ கண்டோம், Vaazha Kandom - உஜ்ஜீவிக்கும் வகையறிந்தோம்
ஏழை செம் கால், Ezhaik Sem Kaal - மிருதுவாய்ச் சிவந்த கால்களையுடைய
இன் துணை நாரைக்கு, In Thunai Naraikku - இனிய துணையாகிய நாரைச்சேவனுக்கு
இரை தேடி, Irai Thedi - உணவு தேடிக்கொண்டு
கூழை பார்வை, Koozhai Paarvai - க்ருத்ரிமமான பார்வையை
கார் வயல் மேயும், Kaar Vayal Meyum - கருவடைந்த வயல்களிலே மேயப்பெற்றதும்
கேழல், Kezhal - வராஹாவதாரம் செய்தருளினவராய்
செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணராய்
மா முகில் வண்ணர், Maa Mukil Vannaar - காளமேகம் போன்ற நிறத்தையுடையவரான பெருமாள்
மருவும் ஊர், Maruvum Oor - பொருந்திவாழும் திவ்ய தேசமாயிருப்பதுமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியை
வந்து காண்மின், Vandhu Kaanmin - வந்து ஸேவியுங்கள்