திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1787 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழியை அப்யசிக்க வல்லார் –இங்கும் குறைவற அனுபவித்து அங்கும் குறைவற அனுபவிக்கப் பெறுவார்கள்) 10 | பொன்னலரும் புன்னை சூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கை நோய் கூர விருந்ததனைக்
கன்னவிலும் திண தோள் கலியன் ஒலி வல்லார்
மன்னவராய் மண்ணாண்டு வானாளும் உன்னுவரே –9-4-10 | பதவுரை Show / Hideபொன் அலரும் புன்னை சூழ், Pon Alarum Punnai Soozh - பொன் போன்ற பூக்கள் மலரப்பெற்ற புன்னை மரங்களால் சூழப்பட்ட புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியி லெழுந்தருளியிருக்கிற அம்மானை, Ammaanai - எம்பெருமான் விஷயத்திலே மின் இடையார், Min Idaiyaar - மின்னல்போல் நுண்ணிய இடையை யுடையரான பெண் பிறந்தவர்கள் வேட்கை நோய் கூர, Vetkai Noi Koora - ஆசை நோய் மிகும்படியாக இருந்தனை, Irundhanai - இருக்கும் நிலைமையைப் பற்றி கல் நவிலும் திண்தோள் கலியன், Kal Navilum Thinthol Kalyan - மலையென்று போற்றத் தகுந்த திண்ணிய திருத்தோள்களை யுடையரான ஆழ்வார் ஒலி, Oli - அருளிச் செய்த இப்பாசுரங்களை வல்லார், Vallar - கற்று வல்லவர்கள் மன்னவர் ஆய், Mannavar Aay - அரசர்களாகி மண் ஆண்டு, Man Aandu - பூமியை ஆட்சிபுரிந்து (பிறகு) வான் நாடும், Vaan Naadum - பரமபத நாட்டிற்கும் உன்னுவர், Unnuvar - விரைந்தெழுவர் |