திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1777 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்து பாட்டையும் அதிகரிக்கவுமாம் அன்றிக்கே ஒரு பாட்டை அதிகரிக்கவுமாம் அதில் அர்த்தானுசந்தானம் பண்ணவுமாம் அதில் இசையை அப்யசிக்கவுமாம் – இவ்விசை தன்னை ஒருவன் பாடா நின்றால் அதில் அசஹமானனாம் அதன்றிக்கே ஒழியுமுமாம் – ஏதேனும் ஒரு ஆகாரத்தில் அந்வயமே வேண்டுவது – அவர்களுக்கு வாசஸ் ஸ்தான தேசம் -துக்க கந்த ரஹீதமான நித்ய விபூதியே இத்தை இங்கே அப்யசிக்க அவர்கள் இங்குத்தை தனிமை தீர அர்ச்சிராதி மார்க்கமே அங்குள்ளார் கொண்டாடப் போய் நித்ய விபூதியிலே புக்கு நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்) 10 | இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை
வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –9-3-10 | பதவுரை Show / Hideஇலங்கு முத்தும், Ilangu Muthum - விளங்குகின்ற முத்துக்களையும் பவளம் கொழுந்தும், Pavalam Kozhundum - பவளத்துளிர்களையும் எழில் தாமரை, Ezhil Thamarai - அழகிய தாமரைகளையு முடைத்தாய் புலங்கள் முற்றும், Pulangal Mutrum - உள்ள இடங்கள் முழுதும் பொழில் சூழ்ந்து, Pozhil Soozhndu - சோலைகளால் சூழப்பட்டதாய் அழகு ஆய, Azhagu Aaya - அழகியதான புல்லாணி மேல், Pullaani Mael - திருப்புல்லாணிவிஷமாக, கலங்கல் இல்வா புகழான், Kalangal Ilvaa Pugazhaan - கலக்கமற்ற கீர்த்தியையுடைய வரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச் செய்த மாலை, Maala - சொல்மாலையாகிய இத்திரு மொழியை வலங்கொள் தொண்டர்க்கு, Valangol Thondarkku - அதிகரிக்கின்ற பாகவதர்களுக்கு இடம் ஆவது, Idam Aavadhu - இருப்பிடமாவது (எவ்விடமென்றால்) பாடு இல்லைகுந்தம், Paadu Illaikundham - ஒரு துன்பமுமில்லாத ஸ்ரீவைகுண்டமே. |