திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1777 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1777பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்து பாட்டையும் அதிகரிக்கவுமாம் அன்றிக்கே ஒரு பாட்டை அதிகரிக்கவுமாம் அதில் அர்த்தானுசந்தானம் பண்ணவுமாம் அதில் இசையை அப்யசிக்கவுமாம் – இவ்விசை தன்னை ஒருவன் பாடா நின்றால் அதில் அசஹமானனாம் அதன்றிக்கே ஒழியுமுமாம் – ஏதேனும் ஒரு ஆகாரத்தில் அந்வயமே வேண்டுவது – அவர்களுக்கு வாசஸ் ஸ்தான தேசம் -துக்க கந்த ரஹீதமான நித்ய விபூதியே இத்தை இங்கே அப்யசிக்க அவர்கள் இங்குத்தை தனிமை தீர அர்ச்சிராதி மார்க்கமே அங்குள்ளார் கொண்டாடப் போய் நித்ய விபூதியிலே புக்கு நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்) 10
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப் புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல் கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –9-3-10
பதவுரை Show / Hide
இலங்கு முத்தும், Ilangu Muthum - விளங்குகின்ற முத்துக்களையும்
பவளம் கொழுந்தும், Pavalam Kozhundum - பவளத்துளிர்களையும்
எழில் தாமரை, Ezhil Thamarai - அழகிய தாமரைகளையு முடைத்தாய்
புலங்கள் முற்றும், Pulangal Mutrum - உள்ள இடங்கள் முழுதும்
பொழில் சூழ்ந்து, Pozhil Soozhndu - சோலைகளால் சூழப்பட்டதாய்
அழகு ஆய, Azhagu Aaya - அழகியதான
புல்லாணி மேல், Pullaani Mael - திருப்புல்லாணிவிஷமாக,
கலங்கல் இல்வா புகழான், Kalangal Ilvaa Pugazhaan - கலக்கமற்ற கீர்த்தியையுடைய வரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச் செய்த
மாலை, Maala - சொல்மாலையாகிய இத்திரு மொழியை
வலங்கொள் தொண்டர்க்கு, Valangol Thondarkku - அதிகரிக்கின்ற பாகவதர்களுக்கு
இடம் ஆவது, Idam Aavadhu - இருப்பிடமாவது (எவ்விடமென்றால்)
பாடு இல்லைகுந்தம், Paadu Illaikundham - ஒரு துன்பமுமில்லாத ஸ்ரீவைகுண்டமே.