திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1769 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அதனில் பெரிய என் அவா -என்னுமா போலே விபுத்வத்துக்கு அவ்வருகாம் படியாய் இருக்கை- அணு வஸ்து இறே விபு வஸ்துவை விளாக்குலை கொள்ளுகிறது – அப்படியே இருக்கும் இறே சங்கோசம் அற அவன் பண்ணிக் கொடுத்த வாறே – பிரிகிற தமக்கும் அது உண்டாகில் பிரியான் இறே-இன்னம் காதல் தானே பெருகி தலை மறிந்தது இல்லை) 2 | உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தேன் தொழுதும் எழு
முருகு வண்டுண் மலர்க்கைதையின் நீழலில் முன்னொரு நாள்
பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே –9-3-2 | பதவுரை Show / Hideநெஞ்சே, Nenjee - மனமே! (- (பின்னை என்ன செய்யவேணுமென்கிறாயோ, கேள்;)) இங்கு இருந்து, Ingu Irundhu - இங்கேயிருந்துகொண்டு நினைந்து, Ninaindhu - சீந்தித்து உருகி, Urugi - உருகுவதனால் என்னபயன்? வண்டு, Vandu - வண்டுகள் முருகு உண், Murugu Un - தேனுண்ணப் பெற்ற மலர், Malar - பூவையுடைத்தான கைதையின், Kaithaiyin - தாழையினுடைய நீழலில், Neelalil - நிழலிலே முன் ஒருநாள், Mun Orunaal - முன்பொருநாள் என் உள்ளம், En Ullam - என்னெஞ்சானது பெருகு காதன்மை எய்த, Perugu Kaadhanmai Eydha - மிக்க ஆவல்கொள்ளும்படி பிரிந்தான், Pirindhaan - பிரிந்துபோன பெருமானுடைய இடம், Idam - இருப்பிடமாயும் முந்நீர், Munnir - கடவானது பொருது, Porudhu - அலையெறிந்து கரைக்கே, Karaikkai - கரையிலே மணி உந்து, Mani Unthu - ரத்னங்களைக் கொழித்துத் தள்ளுமிடமாயுமுள்ள புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை தொழுதும், Thozhudum - சென்றுவணங்குவோம்; எழு, Ezhu - எழுந்திரு |