திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1758 | பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மர்மங்களிலே கடாஷியா நின்றார் பார்த்த பார்வை ஒரு கால் மாற வைக்கிறிலர் – நீ பின்னை செய்தது என் என்ன –இப்பார்வைக்கு நானும் கூட்டு என்று பார்க்கிறாளோ -என்று அஞ்சுகின்றேன் – அவன் பார்வையும் அவள் பார்வையும் ஆனதாகிறது – அப்போதை அழகு இருந்த படி காண்) 1 | பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்
மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-1 | பதவுரை Show / Hideதோழீ, Thozhi - வாராய் தோழியே!, இவர் மேனி, Ivar Meeni - இந்த எம்பெருமானுடைய திருமேனியானது பொன், Pon - பொன்னாயிருக்கின்றது மரதகத்தின் பொங்கு இள சோதி, Marathakathin Pongu Ila Sothi - மரதகப்பச்சையின் பரம்பின புதிய தேஜஸ்ஸை யுடைத்தான அகலத்து, Akalathu - திருமார்பில் (சாத்தப்பட்டுள்ள) ஆரம், Aaram - ஹாரமானது மின், Min - மின்னலாயிருக்கிறது இவர், Ivar - இப்பெரியவர் வாயில், Vaail - வாயினால் நல் வேதம் ஓதும் வேதியர், Nal Vedham Oodhum Vethiyar - நல்லவேதத்தை உருச்சொல்லுகிற வைதிகரா யிருக்கின்றார்; வானவர் ஆவர், Vaanavar Aavar - (மேன்மையில்) தேவர்களோடொப்பர்; (இவர்) என்னையும் நோக்கி, Ennaiyum Nookki - என்னையும் உற்றுப் பார்த்து என் அல்குலும் நோக்கி, En Alkulum Nookki - எனது நிதம்பத்தையும் உற்றுப் பார்த்து ஏந்து இள கொங்கையும், Aendu Ila Kongaiyum - ஏந்தப்படுகின்ற இளைய முலைகளையும் நோக்குகின்றார், Nookkiyiraar - உற்றுப்பார்க்கின்றார்; அன்னை என் நோக்கும் என்று, Annai En Nookkum Endru - தாய் என்ன நினைப்பாளோ வென்று அஞ்சுகின்றேன், Anjikiren - பயப்படுகிறேன்; அச்சோ, Achcho - ஆச்சரியம்; ஒருவர் அழகிய ஆ, Oruthar Azhagiya Aa - ஒரு பெரியவருடைய ஸௌந்தரியத்தை என்ன! சொல்லுவேன். |