திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1756 | பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஞ்சின பாரமானது ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வாராத படி ஸ்ரீ மகா பாரதத்திலே ராஜாக்கள் ஆனவர்கள் மடியும் படியாக ஸ்ரீ அர்ஜுனன் முன்னே நின்று தேரை நடத்தினவன் – ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவன்) 9 | பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரிலே
மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன்
துன்னு மாதவியும் சுர புனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
தென்ன வென்றளிகள் முரன்றிசை பாடும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-9 | பதவுரை Show / Hideபார்மகட்கு, Paarmakadku - பூமிப்பிராட்டிக்கு இருந்த (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.)) பன்னிய பாரம், Panniya Paaram - விஞ்சின பாரமானது ஒழிய, Ozhiy - விட்டுநீங்கும்படி பாரதம் மா பெரு போரில், Bharatham Maa Peru Poaril - மிகப் பெரிய பாரதயுத்தத்தில் மன்னர்கள், Mannargal - அரசர்கள் மடிய, Madiy - தொலையும்படி மைத்துனற்கு, Maiththunarukku - அர்ஜுநனுக்கு மணி நெடு திண் தேர் உய்த்த, Mani Neduthin Ther Uyththa - மணிகளுடையதாய்ப் பெரிதாய்த் திடமாயிருந்த தேரை நடத்தின மா மாயன், Maa Maayan - ஆச்சரிய சக்தியுக்தனான பெருமான்,- துன்னு மாதவியும், Thunnu Maadhaviyum - நெருங்கின குருக்கத்தியும் சுரபுனை பொழிலும், Surapunai Pozhilum - சுரபுன்னைச் சோலைகளும் சூழ்ந்து எழு செண்பகம், Soozhndhu Ezhuthu Senbagam - சுற்றிலுமுண்டான செண்பகங்களும் ஆகிய இவற்றினுடைய மலர்வாய், Malarvaai - பூக்களிலே அளிகள், Azhigal - வண்டுகள் தென்ன என்று, Thenna Endru - தென்ன தென்ன வென்று முரன்று, Murandru - ஆலாபித்து இசை பாடும், Isai Paadum - இசைபாடப்பெற்ற |