திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1747 | பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றை நிதியாக கொண்டு பாடும் அடியார்களுக்கு கால தத்வம் உள்ளதனையும் ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே ஸ்ரீ பரமபதம் ஆட்சியாகக் கடவது – ஸ்ரீ சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபடி கண்டேனுக்கு இத்தை அப்யசித்தவர்களுக்கும் அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம்) 10 | கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே –8-10-10 | பதவுரை Show / Hideகண்ட சீர், Kanda Seer - கண்ணாலே ப்ரத்யக்ஷமாகக் காணக்கூடிய செல்வம் பொருந்திய கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே உறை, Urai - நித்யவாஸஞ்செய்தருள்கின்ற அம்மானை, Ammaanai - சௌரிப் பெருமான் விஷயமாக, சீர் கொண்ட, Seer Konda - ஸ்ரீ வைஷ்ணவலக்ஷமி வாய்ந்த தொண்டன், Thondan - தாஸனான கலியன், Kaliyan - திருமங்கைமன்னன் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Maalaik - இப்பாமாலையை பண்டம் ஆய், Pandam Aay - நிதியாகக் கொண்டு பாடும், Paadum - பாடவல்ல அடியவர்க்கு, Adiyavarkku - ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு எஞ்ஞான்றும், Ennjanrum - எப்போதும் அண்டம் போய் ஆட்சி, Andam Poi Aatchi - பரமபதத்திலிருந்து கொண்டு வானகமாளப் பெறுவதாகும்; அவர்க்கு அது அறிந்தோம், Avarkku Adhu Arindhom - அவர்கட்கு அதுவே பேறு என்பதை நிச்சயமாகத் தெரிந்து கொண்டோம். |