திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1736 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1736பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு தேச விசேஷத்திலே போனால் சதா தர்சன நத்தாலே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை இங்கே கண்ணாலே கண்டு களிக்கப் பெறுவது என்றோ -என்கிறார் – இங்கே கண்களாலே காண்கை யாவது என் என்னில்-இவருடைய த்வரை இருக்கிற படி இறே) 9
கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும் தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள் விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ –8-9-9
பதவுரை Show / Hide
கண் ஆர், Kan Aar - கண் பொருந்தும்படியான (ஸுந்தரமான)
கண்ணபுரம், Kannapuram - திருக்கண்ணபுரத்திலும்
கடிகை, Kadikai - திருக்கடிகாசலத்திலும்
தண் ஆர், Than Aar - குளிர்ச்சி பொருந்திய
தாமரை சூழ், Thamarai Soozh - தாமரைகளாலே சூழப்பட்ட
தலைச்சங்கம் மேல் திசையுள், Thalaichangam Mel Thisaiyul - தலைச்சங்கமென்னும் பதியில் மேலைப்பக்கத்திலும்
விண்ணோர், Vinnor - நித்யஸூரிகளுக்கு
நாள் மதியை, Naal Madiyai - நாள்தோறும் சந்திரன்போலே அநுபவிக்கவுரியனாய்
விரிகின்ற வெம் சுடரை, Virikindra Vem Sudarai - உதயகாலத்தில் விரியும் ஸூரியன்போலே ப்ரதாபம் மிக்கவனான எம்பெருமானை
இங்கு, Ingu - இந்நிலத்திலே
கண் ஆர கண்டுகொண்டு, Kan Aara Kandukondu - கண்கள் த்ருப்திபெறுமளவும் காணப்பெற்று
களிக்கின்றது, Kalikkindrathu - ஆநந்திப்பது
என்று கொல், Endru Kol - என்றைக்கோ?.